தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் என்ன கிடைக்கிறது?
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த புதிய திட்டத்தில் தங்களுக்கு எந்தவித பலனும் கிடைப்பதில்லை என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இப்போது இந்த புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் பற்றி பார்ப்போம்.
ஓய்வூதியம்
தமிழகத்தில் கடந்த 2004ம் ஆண்டு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து 10% தொகை பிடித்தம் செய்யப்பட்டு அதற்கு ஈடாக 10% தொகை அரசு சார்பாக தொகை செலுத்தப்படும். இதற்கு ஆண்டுக்கு 8.7% வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பிடித்தம் செய்யப்பட்ட தொகையை மாநில அரசுகள் மத்திய அரசின் PFRDA இல் செலுத்தப்படுகிறது. இந்த தொகையை கையாளுவதற்கு Pension Fund Managers குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 62 ஆக அதிகரிக்கும் ஓய்வு பெறும் வயது? முதல்வரின் திட்டம் என்ன?
இந்த குழு இந்த தொகையை LIC, UTI உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் முதலீடு செய்கிறது. இதில் அரசு ஊழியர்களின் பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கு கிடைக்கும் அதிகமான வட்டியை அரசாங்கம் எடுத்துக் கொள்கிறது. அரசு ஊழியர்களின் பணிக்காலம் முடிவடையும் போது சேமிக்கப்படும் தொகையில் இருந்து 60% ரொக்கமாக ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள 40% தொகை LIC உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும். இந்த முதலீட்டின் மூலமாக லாபம் கிடைத்தால் அரசு ஊழியர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும்.
Exams Daily Mobile App Download
இதில் நஷ்டம் ஏற்பட்டால் இந்த தொகை அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாது. அதாவது பங்கு சந்தையில் நஷ்டம் ஏற்பட்டாலும் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும் இந்த முதலீடு தொகை வழங்கப்படாது. அதாவது இப்போது ஒரு ஓய்வு பெறவுள்ள அரசு ஊழியரின் CPS கணக்கில் ரூ.10,40,000 லட்ச இருக்கிறதெனில் அவருக்கு இதில் ரொக்கமாக ரூ.6,24,000 வழங்கப்படுகிறது. அதன் பிறகு 40% தொகை பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இதற்கு 10% வட்டி கொடுக்கப்பட்டால் ஆண்டுக்கு ரூ.41,600 கிடைக்கிறது. அதன்படி ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.3,466 வழங்கப்படுகிறது. இந்த தொகையை முதிர்வு காலத்தில் ஒரு வாடகை வீட்டில் கூட இருக்க முடியாது என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.