மீண்டும் லிங்க் விரைவு ரயில் சேவைகள் தொடக்கம்? வலுக்கும் கோரிக்கை!!
இந்தியாவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ரயில் சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டது. தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில் 95% மட்டுமே ரயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் சிரமப்படுகின்றனர். அதனால் மீண்டும் விரைவு ரயில் சேவைகள் உள்ளிட்ட சேவைகளை தொடங்க வேண்டும் என பயணியர் நல சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
லிங்க் விரைவு ரயில் சேவை:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் குறிப்பாக நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கும் ரயில் சேவை ஆனது முற்றிலும் முடக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டு அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், ரயில்வே துறையில் 95% ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுவதாகவும் வழக்கம் போல் அனைத்து ரயில்களையும் இயக்க வேண்டும் எனவும் பயணியர் நல சுங்கத்துறையினர் ரயில்வே துறையின் பொது செயலாளரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னை-தூத்துக்குடி, தூத்துக்குடி-கோவை உள்ளிட்ட லிங்க் விரைவு ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
மேலும் திருநெல்வேலி-கேரளா மாநிலம் பாலக்காடு வரை உள்ள விரைவு ரயிலை தூத்துக்குடி வரை இயக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். அத்துடன் மதுரை-புனலூர் விரைவு ரயில் கோவில்பட்டி மற்றும் கடம்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் எனவும் இந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே துறையானது விரைவில் நடவடிக்கை எடுக்கும் என தெற்கு ரயில்வே துறையின் பொது மேலாளர் உறுதியளித்துள்ளார்.