கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விவகாரம் – கலவரக்காரர்கள் குண்டர் சட்டத்தில் கைது! உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
கள்ளக்குறிச்சி மாவட்ட தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அந்த அம்மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிலர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி:
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்த மாணவி கடந்த .ஜூலை மாதம் உயிரிழந்தார். இதயனையடுத்து மாணவியின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பிறகு கலவரமாக மாறியது.
Follow our Instagram for more Latest Updates
போராட்டக்காரர்கள் பள்ளி பேருந்து மற்றும் பள்ளி வளாகத்தை சேதப்படுத்தினர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் கலவரத்தில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அதில் கைது செய்யப்பட்ட விஜய் என்பவரது மனைவி தனது கணவரை விடுவிக்க கோரி வழக்கு உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
அந்த மனுவில் தனது கணவர் எந்த கலவரத்தையும் தூண்டாத நிலையில் கள்ளக்குறிச்சி கலவரத்தை மட்டும் கருத்தில் கொண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து தமிழக உள்துறை செயலாளர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இன்னும் 4 வாரங்களில் பதிலளிக்கும் படி உத்தரவிட்டது.