பள்ளி மாணவர்கள் முழுக்கை சட்டை அணிய வேண்டும்.. உத்தர பிரதேசத்தில் அதிகரிக்கும் டெங்குவால் அமைச்சர் அறிவுரை!
தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால கொசுக்கள் மூலமாக பரவும் நோய்களான டெங்கு, சிக்கன் குனியா அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதனால் அனைத்து பள்ளிகளுக்கும் உத்தர பிரதேச அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
டெங்கு காய்ச்சல்
இந்தியாவில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழை நீர் தேக்கம் அதிகரித்து கொசுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக கொசுக்களின் வாயிலாக டெங்கு, சிக்கன் குனியா உள்ளிட்ட நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் கடந்த சில வாரங்களில் டெங்கு மற்றும் பிற காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
இந்நோய்களை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக அனைத்து பள்ளிகளுக்கும் நோய் தொற்றில் இருந்து மாணவர்களை பாதுகாப்பதற்கு தேவையான சில வழிமுறைகளை அமைச்சர் வழங்கியுள்ளார். இது தொடர்பாக இவர் தெரிவித்துள்ளதாவது, அனைத்து பள்ளி மாணவர்களும் கொசுக்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க முழுக்கை சட்டை அணிந்து வர வேண்டும்.
மூச்சை முட்ட வைக்கும் உலக மக்கள் தொகை தொகை – 800 கோடியை எட்டியுள்ள நிலை!
Exams Daily Mobile App Download
அத்துடன் பள்ளி வளாகத்தில் இருக்கும் நீர் தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அத்துடன் காலை வணக்கக் கூட்டத்தில் மாணவர்களுக்கு நோய் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் பள்ளி வளாகத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்தல் மற்றும் மாணவர்கள் அடிக்கடி கை கழுவுதல் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு காய்ச்சல் தொடர்பான ஏதேனும் அறிகுறிகள் இருப்பின் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.