அரசு துறையில் பகுதி நேர வேலைவாய்ப்பு 2022 – தமிழ் தெரிந்தால் போதும்! முழு தகவல்கள் இதோ!

0
அரசு துறையில் பகுதி நேர வேலைவாய்ப்பு 2022 - தமிழ் தெரிந்தால் போதும்! முழு தகவல்கள் இதோ!
அரசு துறையில் பகுதி நேர வேலைவாய்ப்பு 2022 - தமிழ் தெரிந்தால் போதும்! முழு தகவல்கள் இதோ!
அரசு துறையில் பகுதி நேர வேலைவாய்ப்பு 2022 – தமிழ் தெரிந்தால் போதும்! முழு தகவல்கள் இதோ!

தூய்மைப்பணியாளர் பணிக்கு மொத்தமாக 28 காலிப் பணியிடங்கள் உள்ளன. பகுதிநேரமாக தூய்மைப்பணியாளர் பணியை செய்ய விரும்பும் நபர்கள் உடனடியாக கீழ் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தூய்மைப்பணியாளர் பணி:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர தூய்மைப் பணியாளர் பணியிடங்களை நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அதாவது, பகுதிநேர தூய்மைப் பணியாளர் பணிக்கு 13 ஆண்கள் மற்றும் 15 பெண்கள் என்கிற வீதத்தில் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளனர். இந்த பகுதி நேர ஊழியர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.3,000 வரைக்கும் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

ஆண்களில் முன்னுரிமை பெற்றவர்களில் பொதுப்பிரிவை சேர்ந்தவர்களில் ஒரு பேரும், தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்களில் ஒரு பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர்மரபினர் பிரிவை சேர்ந்தவர்களில் ஒரு பேரும், ஆண்கள் முன்னுரிமை இல்லாதோர்கள் பொதுப்பிரிவை சேர்ந்தவர்களில் மூன்று பேரும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்தவர் முஸ்லிம் அல்லாதோர் 3 பேரும், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) பிரிவை சேர்ந்தவர்களில் ஒரு பேரும், தாழ்த்தப்பட்டோர்(அருந்ததியர்) பிரிவை சேர்ந்தவர்களில் ஒரு பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர்மரபினர் பிரிவை சேர்ந்தவர்களில் இரண்டு பேரும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ரூ.583 & ரூ.553க்கான ப்ரீபெய்ட் திட்டம்! முழு விவரம் இதோ!

மேலும், பெண்கள் முன்னுரிமை உள்ளோரில் பொதுப்பிரிவை சேர்ந்தவர்களில் ஒரு பேரும், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் அல்லாதோர் என்கிற அடிப்படையில் ஒரு பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர்மரபினர் பிரிவை சேர்ந்தவர்களில் ஒரு பேரும், பெண்கள் முன்னுரிமை இல்லாதோர் என்கிற அடிப்படையில் பொதுப்பிரிவை சேர்ந்தவர்களில் 5 பேரும், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் அல்லாதோர் பிரிவை சேர்ந்தவர்களில் 3 பேரும், தாழ்த்தப்பட்டோர் பிரிவை சேர்ந்தவர்களில் 2 பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர்மரபினர் பிரிவை சேர்ந்தவர்களில் 2 பேருக்கும் பணியிடங்கள் வழங்கப்படவுள்ளன.

நேர்காணல் முறையின் மூலமாகவே தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். விருப்பமுள்ள நபர்கள் அதற்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சாதிச் சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை அல்லது இருப்பிட சான்று ஆகிய ஆவணங்கள் அனைத்தையும் இணைக்க வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் மே 30 ஆம் தேதிக்குள் சமர்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!