மூர்த்தி நிலைமையை சொன்ன கண்ணன், அதிர்ச்சியில் ஐஸ்வர்யா மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
மூர்த்தி நிலைமையை சொன்ன கண்ணன், அதிர்ச்சியில் ஐஸ்வர்யா மீனா - இன்றைய
மூர்த்தி நிலைமையை சொன்ன கண்ணன், அதிர்ச்சியில் ஐஸ்வர்யா மீனா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
மூர்த்தி நிலைமையை சொன்ன கண்ணன், அதிர்ச்சியில் ஐஸ்வர்யா மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் முல்லை வீட்டை விட்டு வெளியே வந்ததை நினைத்து வருத்தப்பட ஆனால் நாம எடுத்த முடிவு சரியானது தான் என கதிர் முல்லைக்கு ஆறுதல் சொல்கிறார். மறுபக்கம் வீட்டில் எல்லாரும் எங்கே என மீனா ஐஸ்வர்யாவிடம் கேட்க கண்ணன் போன் செய்து நிலவரத்தை சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் முல்லை வீட்டை விட்டு வெளியே வந்ததை பற்றி பேசிக் கொள்கின்றனர். முல்லை டாக்டர் முடியாது என சொன்ன போதே நான் சும்மா இருந்திருக்க வேண்டும் எல்லாம் என்னால் தான் என சொல்ல கதிர் உன்னை குறை சொல்லாதே இப்போது பேசுபவர்கள் எல்லாரும் அப்போது எல்லாம் நல்லபடியாக தான் நடக்கும் என சொன்னார்கள் நாம கடன் வாங்கி செய்தது தான் தவறு பணம் வைத்து கொண்டே செய்தால் யாரும் எதுவும் செய்திருக்கமாட்டார்கள் என சொல்கிறார். பின் நாம வெளியே வந்ததை நினைத்து நம்மை பேசியவர்கள் எல்லாரும் சந்தோசமாக இருப்பார்கள் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

கண்ணன் அழுததை என்னால் தாங்க முடியவில்லை ஆனால் எல்லாருக்கும் கண்டிப்பாக புரியும் என சொல்ல முல்லை என்னை நீ நம்புறியா என கேட்கிறார்., ஏன் இப்படி கேட்குறீங்க என முல்லை சொல்ல நாம முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் அதனால் தான் என கேட்க முல்லை ரோட்டில் இருக்க சொன்னால் கூட நான் கேட்டிருப்பேன் எனக்காக உங்க உலகமே உங்க அண்ணன் அண்ணி தான் அவர்களை தூக்கி எரிந்துவிட்டு வந்திருக்கீங்க என சொல்கிறார். உங்க மீது எனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக சொல்ல கதிர் எனக்கு இது போதும் என சொல்கிறார்.

மறுபக்கம் தனம் பேசியதை எல்லாம் நினைத்து தனத்தின் அம்மா அழுது கொண்டிருக்கிறார். தனம் அம்மா சாப்பிடாமல் அழுது கொண்டிருக்க கஸ்தூரியும் ஜெகாவும் சாப்பிட சொல்கிறார். ஆனால் தனம் அம்மா அவளுக்காக தான எல்லாம் செய்தோம் ஆனால் அவள் நம்மை வெளியே போக சொல்லிவிட்டால் என சொல்ல கஸ்தூரி நீங்க தான் உங்க பெண்ணைபற்றி நினைக்கிறீர்கள் இதெல்லாம் முன்னாடியே நீங்க தடுத்திருக்க வேண்டும் என சொல்கிறார். தனம் வெளியே போக சொன்னது இது முதல் முறை இல்லை என கஸ்தூரி சொல்கிறார்.

வெண்பா திருமண நிகழ்ச்சிக்கு கண்ணம்மாவை அழைக்கும் ஷர்மிளா, லட்சுமியிடம் வருத்தப்படும் ஹேமா – இன்றைய எபிசோட்!

தனம் அந்த குடும்பத்திற்காக எவ்வளோ செய்து இருக்கிறாள் 15 வருஷம் குழந்தை வேண்டாம் என இருந்தால் முல்லைக்கு 5 லட்சம் கொடுத்திருக்கிறாள் அதெல்லாம் அவள் நினைத்து கூட பார்க்கவில்லை என அழுகிறார். பின் கயல் அழ மீனா தூக்கத்தில் எழுந்து பார்க்க சொல்கிறார். ஆனால் கயல் அழுது கொண்டே இருக்க மீனா எழுந்து ஜீவா இல்லாததை பார்க்கிறார். பின் வெளியே வந்து ஜீவாவை தேட யாரும் வீட்டில் இல்லை என ஐஸ்வர்யா கேட்கிறார். நீ ஏன் இந்த நேரத்தில் இங்கே உட்கார்ந்து இருக்கிறாய் என கேட்கிறார்.

அப்போது ஐஸ்வர்யா மூர்த்தி மாமாவிற்கு நெஞ்சுவலி வந்துவிட்டது அதான் மருத்துவமனைக்கு சென்று இருக்காங்க என சொல்கிறார். அவர்களிடம் பேசுனியா நாம கிளம்பி போவோம் மீனா சொல்ல இல்லை அவர்கள் போன் வரும் என தான் நான் காத்திருக்கிறேன் என ஐஸ்வர்யா சொல்கிறார். போன் செய்தால் எடுக்கவே மாட்டான் என சொல்ல ஆனால் மீனா போன் செய்து கொண்டே இருக்கிறார். ஐஸ்வர்யா அவர்கள் போன் செய்யட்டும் என சொல்கிறார். பின் ஐஸ்வர்யா மாமாவிற்கு எதுவும் ஆகாதே என பயத்துடன் கேட்க அதெல்லாம் ஆகாது என மீனா சொல்கிறார்.

மீனா நாம போவோமா என கேட்க குழந்தைகளை வைத்து கொண்டு போக முடியாது என சொல்கிறார். பின் உங்க அப்பாவால் தான் இவளோ பிரச்சனை என சொல்ல என் அப்பாவையே சொல்லாத உன் சித்தி தான் என் அப்பா பேசுவதை கேட்டு பிரச்சனை செய்தார் என மீனா சொல்கிறார். பின் மருத்துவமனையில் ஜீவா பலரிடம் பணம் கேட்க யாரும் போனை எடுக்கவில்லை. அப்போது கண்ணன் ஐஸ்வர்யாவிற்கு போன் செய்கிறார். ஐஸ்வர்யாவிடம் அழுது கொண்டே பேச என்ன ஆச்சு என ஐஸ்வர்யா கேட்கிறார். அண்ணனிற்கு ஹார்ட்அட்டாக் என கண்ணன் சொல்ல ஐஸ்வர்யாவும் மீனாவும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பின் அண்ணனிற்கு அடைப்பு இருக்கிறதாம் உடனே ஆப்ரேசன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் சொன்னதாக கண்ணன் சொல்கிறார். மீனா நீ அழாதே கண்ணா அதெல்லாம் ஒன்றும் ஆகாது என சொல்கிறார். இல்ல அண்ணி உடனே ஆப்ரேசன் செய்ய வேண்டுமாம் இல்லையென்றால் ஆபத்தாகிவிடுமாம் உடனே 2 லட்சம் கட்ட சொல்லிருக்காங்க பணத்திற்கு என்ன செய்வது என தெரியவில்லை என சொல்கிறார். மீனா அதை கேட்டு அதிர்ச்சி அடைய ஐஸ்வர்யா இப்போ என்ன செய்வது எனக்கு மிகவும் பயமாக இருப்பதாக சொல்கிறார். பணம் ஏற்பாடு செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என மீனா சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!