கதிருக்கு நகையை கொடுத்த முல்லை, நகைகளை அடமானம் வைத்து கடன் அடைக்க திட்டமிடும் தனம் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் வீட்டிற்கு தேவையான அட்வான்ஸ் கொடுக்க தனது நண்பரிடம் பணம் வாங்க போகிறேன் என சொல்ல உடனே முல்லை தன்னுடைய தாலி செயினை கொடுக்கிறார். பின் தனம் தன்னுடைய நகைகளை கொடுத்து கடனை அடைக்க சொல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை கதிரிடம் அக்கா குழந்தைகளை எல்லாம் மிஸ் செய்யவில்லையா என கேட்கிறார். பின் முல்லை சரி அதை பற்றி கேட்கவில்லை என சொல்லிவிட்டு தனியாக வீடு பார்த்தால் பணம் தேவைப்படும் என்ன செய்வது என கேட்கிறார். சேகரிடம் பணம் கேட்டு இருக்கிறேன் தரேன் என சொல்லி இருக்கான் என சொல்ல, டிரீட்மென்டிற்கு பணம் கொடுப்பதாக சொல்லி இருக்கிறேன். அது மட்டுமில்ல நமக்கு குழந்தையும் பிறக்கும் அதற்கான டிரீட்மென்ட் செலவும் சம்பாரிக்கலாம் என சொல்ல, முல்லை கடன் வாங்க வேண்டாம் என் நகை இருக்கிறது என சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
கதிர் வேண்டாம் என சொல்ல நண்பரிடம் கடன் வாங்குவீங்க ஆனால் நான் கொடுத்தால் வாங்கமாட்டீங்களா என கேட்கிறார். பின் முல்லை இந்த ஒருமுறை நான் சொல்வதை கேளுங்கள் நீங்க நினைப்பது எல்லாம் சரியாக நடக்கும் என சொல்ல, பின் கதிர் சம்மதிக்கிறார். மறுபக்கம் தனம் வீட்டில் நடந்ததை எல்லாம் நினைத்து வருத்தப்படுகிறார். மீனா அப்பா தம்பிகளுக்கு கல்யாணம் முடிந்துவிட்டால் தம்பிகளுக்கு தனியாக வியாபாரம் வைத்து கொடுத்திருப்போம்.
இப்போது யாருக்கு கஷ்டம் என சொன்னதையும் கதிர் வீட்டை விட்டு கிளம்பியதையும் நினைத்து பார்க்கிறார். முல்லை அம்மா என் மகளை வெளியே அனுப்பிவிட்டு நீங்க யாரும் நன்றாக இருக்கமாடீங்க என சொல்கிறார். பின் மூர்த்தி செலவிற்கு மீனா அப்பா பணம் கொடுத்ததை நினைத்து பார்க்கிறார். அப்போது ஐஸ்வர்யா வர தனம் எதையோ யோசிப்பதை பார்த்து என்ன ஆச்சு என கேட்கிறார், பின் மீனாவும் ஜீவாவும் வர தனம் ஜீவாவிடம் ஒரு உதவி கேட்கிறார்.
தனம் சென்று எல்லா நகைகளையும் கொண்டு வருகிறார். அதை ஜீவாவிடம் கொடுத்து இதில் பாண்டியன் நகை என்னுடைய நகை எல்லாம் இருக்கிறது இதை வைத்து பணம் கொண்டு வரியா என கேட்கிறார். எதற்கு என ஜீவா மீனா கேட்க தனம் பணம் வேண்டும் என சொல்கிறார். மறுபக்கம் கதிர் காலையில் கிளம்பி வர முல்லை தன்னுடைய செயினை கழட்டி கொடுத்துவிட்டு மஞ்சள் கயிறை மாற்றிக் கொள்கிறார். அப்போது கூட கதிர் வேண்டாம் என சொல்கிறார்.
பின் கதிர் கிளம்பிவிட முல்லையின் அப்பா அம்மா வந்த மதியம் நல்ல நேரம் இருப்பதாக சொல்கிறார். அப்போது முல்லை அம்மா முல்லை கழுத்தில் தாலி செயினை காணவில்லை என கேட்க வீட்டிற்கு நல்ல நேரத்தில் போக வேண்டும் என கதிரை கிளம்ப சொல்கிறார். பின் தாலி செயினை கொடுத்து பணத்திற்கு தயார் செய்ய சொன்னதாக சொல்ல அப்பாவிடம் கேட்டு இருக்கலாம் என சொல்கிறார். நீங்க எதுவும் கொடுக்க வேண்டாம் என சொல்ல முல்லை அம்மா மீண்டும் சண்டைக்கு வருகிறார்.
மூர்த்திக்கு தனம் மாத்திரை கொடுத்துவிட கண்ணன் மீண்டும் மூர்த்தியை கிண்டல் செய்கிறார். கடைக்கு இரண்டு நாட்களாக போகவில்லை ஜீவாவிற்கு தான் வேலை அதிகமாக இருக்கும் என சொல்ல, அப்போது தனம் நான் ஒரு வேலை கொடுத்து இருக்கிறேன் அதை பார்த்துவிட்டு கடைக்கு போவான் என தனம் சொல்கிறார். பின் மீனா என் அப்பா கடைக்கு எப்படி போவான் என கேட்க நம்ம கடையில் ஆள் இல்லை என தனம் சொல்ல மீனா என் அப்பா பாவம் தான என சொல்கிறார். கண்ணன் உங்க அப்பா தான் இந்த குடும்பத்திற்கு வில்லன் என சொல்கிறார்.