ரோஹித்திடம் சாந்தி பேசியதை சொன்ன தில்லி, ஜானகி உடல் நிலை மோசமாக இருப்பதாக சொன்ன பாரதி – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ரோஹித்திடம் தில்லி போன் செய்த போது பெண் ஒருவர் பேசியதாக சொல்கிறார். பின் ஜானகி உடல்நிலை பற்றி பாரதி விக்ரமிடம் விவரத்தை சொல்கிறார். கண்ணம்மா அதை அவருடைய கணவரிடம் சொல்ல வேண்டாம் என சொல்கிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் ரோஹித்திடம் தில்லி நான் காலையில் போன் செய்தேன் அப்போது ஒரு பெண் பேசினார். நீ தான் பேசினாய் என நினைத்து நான் உன் மாமியாரிடம் பணம் வாங்கிட்டியா என கேட்டேன். அப்போது அந்த பெண் யார் என கேட்டார் உடனே நான் நாராயணன் பேசுறீயா என கேட்டு போனை வைத்துவிட்டேன் என சொல்ல அதை கேட்டு ரோஹித் அதிர்ச்சி அடைகிறார். யார் பேசுவது என தெரியாமல் தான் பேசுவியா என தில்லியை சத்தம் போட அப்போது அவர்களுக்கு ஏற்கனவே என் மீது சந்தேகம் இருக்கிறது என நினைக்கிறார்.
யார் பேசியதாக சொன்னா வெண்பாவா என கேட்க இல்லை எதோ பழைய பெயர் சொன்னார் என சொல்ல சாந்தியா என கேட்கிறார். ஆமாம் என சொல்ல அவள் வெண்பாவிடம் மாட்டி விட்டிருப்பாள் என ரோஹித் நினைக்கிறார். எப்படியாவது புது திட்டமிட்டு வெண்பாவை நம்ப வைக்க வேண்டும் என ரோஹித் நினைக்கிறார். பின் தில்லியை இனி தேவை என்றால் மட்டும் எனக்கு போன் செய் இல்லை என்றால் யார் பேசுவது என தெரிந்து கொண்டு போன் செய் என சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
மறுபக்கம் ஜானகி அம்மா தூங்கி கொண்டிருக்கும் போது அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருக்கிறது. அவர் கணவரை எழுப்ப அவர் எழுந்திருக்கவில்லை. பின் தண்ணீர் எடுக்க கஷ்டப்பட அவரால் எழுந்திருக்க முடியவில்லை. பின் அலாரம் ஒன்றை அழுத்தி நர்ஸை வர சொல்கிறார். அப்போது நர்ஸ் கண்ணம்மா வந்து ஜானகி அம்மாவிற்கு தண்ணீர் கொடுக்க அந்த அம்மாவிற்கு அப்போது தான் சரியாக இருக்கிறது. பின் ஜானகி அம்மாவிடம் கண்ணம்மா எப்படி இருக்கிறது என கேட்க இப்போது பரவாயில்லை என சொல்கிறார்.
பின் என்னுடைய ரிப்போர்ட் எல்லாம் வந்துவிட்டதா என கேட்க கண்ணம்மா இன்னும் வரவில்லை என சொல்கிறார். எனக்கு எதாவது பிரச்சனை இருந்தால் அதை என்னிடம் சொல்லுங்கள் அவருக்கு தெரிய வேண்டாம் என சொல்ல அப்போது கண்ணம்மா உங்களுக்கு ஒன்றும் ஆகாது என சொல்கிறார். பின் கண்ணம்மா அவர்களை நினைத்து வருத்தப்படுகிறார். பின் பாரதி விக்ரம் ஜானகி அம்மா ரிப்போர்ட் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாரதி அந்த அம்மாவின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக சொல்கிறார்.
என்ன ஆனது என விக்ரம் கேட்க ஜானகி அம்மா இதயத்திற்கு செல்லும் குழாயில் அடைப்பு இருக்கிறது அவருக்கு இப்போது ஆப்ரேசன் செய்ய முடியாது என சொல்கிறார். அதை கேட்டு கண்ணம்மா அதிர்ச்சி அடைய அப்போது ஜானகி அம்மா ரிப்போர்ட் பற்றி கணவருக்கு தெரிய வேண்டாம் என சொன்னதாக சொல்கிறார். பாரதி அதை கேட்டு கோவப்பட்டு சத்தம் போடுகிறார். விக்ரம் கண்ணம்மாவிடம் இவ்வளவு கோவமாக நடந்து கொள்ள வேண்டாம் என சொல்கிறார்.
கோபியை பற்றிய உண்மைகளை ஈஸ்வரியிடம் கூறிய தாத்தா – புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!
மறுபக்கம் ரோஹித் வெண்பாவை பார்க்க வர அப்போது வெண்பா ரோஹித்திடம் உண்மையாகவே நீ பணக்காரனா உன்னை பற்றி எல்லாம் தெரிந்துவிட்டது என சொல்கிறார். அப்போது ரோஹித் என்ன இப்படி பேசுகிறாய் என கேட்க நீ என் அம்மாவை ஏமாற்றி பணம் வாங்கியது எல்லாம் எனக்கு தெரியும் என வெண்பா சொல்கிறார். ஆமாம் நான் பணம் வாங்கினேன் என் கார்டில் பணம் எடுக்க முடியாத நிலை அதனால் தான் பணம் வாங்கினேன் என சொல்ல, வெண்பா உண்மையை சொல் யார் நீ என கேட்கிறார். அப்போது ரோஹித் நான் தான் என நக்கலாக சொல்ல என் மீது பழி போட ஆதாரம் இருக்கிறதா என கேட்கிறார்