சிங்கப்பூரில் இருந்து சீருடன் வந்த மீனாவின் அண்ணன், சிறப்பாக முடிந்த காது குத்து நிகழ்ச்சி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
சிங்கப்பூரில் இருந்து சீருடன் வந்த மீனாவின் அண்ணன், சிறப்பாக முடிந்த காது குத்து நிகழ்ச்சி - இன்றைய
சிங்கப்பூரில் இருந்து சீருடன் வந்த மீனாவின் அண்ணன், சிறப்பாக முடிந்த காது குத்து நிகழ்ச்சி - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
சிங்கப்பூரில் இருந்து சீருடன் வந்த மீனாவின் அண்ணன், சிறப்பாக முடிந்த காது குத்து நிகழ்ச்சி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனத்தின் அண்ணன் தாய்மாமா சீர் கொண்டு வந்திருக்க அவரை முறை செய்யவிடாமல் மீனாவின் அப்பா என் அண்ணா பையன் சீர் செய்ய சிங்கப்பூரில் இருந்து வருவதாக சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், நல்ல நேரம் வந்துவிட்டது அதனால் காது குத்தலாம் என மூர்த்தி சொல்ல, இருங்க முக்கியமான ஒருத்தர் வர வேண்டும் என மீனாவின் அப்பா சொல்கிறார். பின் தனம் கயலுக்கு வாங்கிய கம்மலை எடு என சொல்ல, மீனாவின் அப்பா நீங்க எதற்கு வாங்குனீங்க என கேட்கிறார். பின் மூர்த்தி நானும் எங்க கயலுக்கு வாங்கிருக்கோம் என சொல்ல,தனத்தின் அண்ணன் ஜெகா நானும் வாங்கியிருக்கேன் என சொல்கிறார். நீங்க எதற்கு இதெல்லாம் செய்ய வேண்டும் என கேட்க, நான் தான கயலுக்கு தாய் மாமா முறை செய்ய வேண்டும் என சொல்கிறார்.

கண்ணம்மா நேர்மையை பார்த்து வியந்த பாரதி, குடும்பத்தை பிரிக்க வெண்பாவின் புதிய திட்டம் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

அப்போது தனத்தின் அம்மா 21 தட்டு வாங்கி கொண்டு வந்திருக்கோம் என சொல்ல, மீனாவின் அப்பா இதெல்லாம் தேவை இல்லை என மீனாவின் அம்மாவை புரியும்படி சொல்ல சொல்கிறார். தனம் நான் தான் அண்ணனை முறை செய்ய சொன்னேன் மீனாவிற்கு அண்ணன் இல்லையே அதனால் தான் என சொல்கிறார். அப்போது மீனாவின் அம்மா, இவரது அண்ணன் பையன் சிங்கப்பூரில் இருந்து வந்திருக்கான் என சொல்கிறார். ஏற்கனவே எங்களுக்கு சொத்து பிரச்சனை இருந்தது அதனால் பேசாமல் இருந்தோம் இப்போது தான் எல்லாம் சரியாகி இருக்கிறது என சொல்கிறார்.

பின் மீனா யாரு அம்மா கைலாசம் வந்திருக்காரா என கேட்கிறார். ஏன் என்னிடம் சொல்லவில்லை என கேட்க, அவன் நேற்று தான் வருவதாக சொன்னார் என சொல்கிறார். கஸ்தூரி நீ சொன்னதுக்காக தான் நாங்க இத்தனை சீர் வாங்கி கொண்டு வந்திருக்கோம் என சொல்கிறார். நீங்க தப்பா நினைக்காதீங்க என மீனாவின் அம்மா சொல்ல, விடுங்க அதுனால என்ன என ஜெகா சொல்கிறார், ஜீவாவும் வருத்தப்பட வேண்டாம் என சொல்ல சரி என சொல்கிறார். பின் மூர்த்தி, மீனா என அனைவரும் வருத்தப்பட்டு பேச, விழா நல்லபடியாக நடந்தாலே போதும் என ஜெகா சொல்கிறார்.

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஜன.10 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் அறிவிப்பு!

மீனாவின் அண்ணன் மேள தாளத்துடன் வருகிறார். அவரை மீனாவின் அப்பா மாலை போட்டு வரவேற்கிறார். அப்போது கஸ்தூரி கொஞ்சமாவது பொண்டாட்டி சொல்வதை கேட்க வேண்டும் என சொல்கிறார். கைலாசம் உள்ளே வந்து கயலை கொஞ்சுகிறார். மீனாவின் அப்பா அனைவரையும் அறிமுகம் செய்து வைக்கிறார். பின் கயலை அமர வைத்து மொட்டை போடுகின்றனர். கயல் அழாமல் சிரித்து கொண்டே இருக்கிறார். மொட்டை போட்டு விட்டு காது குத்து நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அப்போது மீனாவின் அம்மா கம்மல் எங்கே என கேட்க, தனம் அவர்கள் வாங்கிட்டு வந்த கம்மலை எடுக்க செல்கின்றனர்.

மீனாவின் அண்ணன் நான் தான் முறை செய்வேன் என சொல்லி கம்மலை எடுக்க சொல்கிறார். கயலுக்கு காது குத்த மீனாவும் ஜீவாவும் வலிக்கும் என நினைத்து பதட்டத்தில் இருக்கின்றனர். மீனா காது குத்தியதை பார்க்க முடியாமல் இருக்க, எல்லாரும் மெதுவாக குத்துங்க என சொல்கிறார். காது குத்தும் போது கயல் பயங்கரமாக அழுகிறார். பின் எல்லாம் நல்லபடியாக முடிகிறது. மீனா வந்து கயலை தூக்கி சமாதானம் செய்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!