கண்ணம்மா நேர்மையை பார்த்து வியந்த பாரதி, குடும்பத்தை பிரிக்க வெண்பாவின் புதிய திட்டம் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
கண்ணம்மா நேர்மையை பார்த்து வியந்த பாரதி, குடும்பத்தை பிரிக்க வெண்பாவின் புதிய திட்டம் - இன்றைய
கண்ணம்மா நேர்மையை பார்த்து வியந்த பாரதி, குடும்பத்தை பிரிக்க வெண்பாவின் புதிய திட்டம் - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
கண்ணம்மா நேர்மையை பார்த்து வியந்த பாரதி, குடும்பத்தை பிரிக்க வெண்பாவின் புதிய திட்டம் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா அரைத்த மாவில் பல்லி விழ அந்த மாவை கீழே கொட்ட போகிறார். வேண்டாம் என வடிவு சொல்ல, கண்ணம்மா நேர்மையாக இருப்பது தான் முக்கியம் என சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா மாவு அரைத்து கொண்டிருக்க பாரதி போன் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் வடிவுக்கரசி வர, என்ன கண்ணம்மா மாவு ஆட்டி கொண்டிருக்க போல என கேட்கிறார். உன் மாவு தான் இந்த ஏரியா முழுவதும் பிரபலமாக இருக்கிறது என கேட்க, நான் நாம வீட்டிற்கு எப்படி இருக்குமோ அப்படி தான் அரைக்கிறேன் என சொல்கிறார். பின் வடிவு மாவில் பல்லி விழுந்து கிடப்பதை பார்த்து கண்ணம்மாவிடம் சொல்கிறார்.

கண்ணம்மா அதை பார்த்து இப்போ என்ன பண்றது என கேட்க, ஓரமா தான விழுந்துருக்கு, நீ அந்த பக்கம் மாவை மட்டும் எடுத்து கீழே போட்டுரு என சொல்கிறார். ஆனால் கண்ணம்மா முடியாது என சொல்கிறார். என்னை நம்பி தான் எல்லாரும் இந்த மாவை வாங்கி சாப்பிடுகிறார்கள். பள்ளி விழுந்த உணவை சாப்பிட்டு எத்தனை பேருக்கு வாந்தி மயக்கம் வந்ததாக பாத்திருக்கிறோம் என சொல்ல, அதுவும் என் கணவர் ஒரு டாக்டர் நானே இப்படி செய்தால் அவரை அவமானபடுத்துவது போல இருக்கும் என கண்ணம்மா சொல்கிறார்.

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஜன.10 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் அறிவிப்பு!

பின் நீயே கஷ்டப்படுகிறாய் இந்த நேரத்தில் இவ்வளவு மாவை கொட்டினால் உனக்கு நஷ்டம் தான என கேட்க, தொழிலில் ஒரு நாள் நஷ்டம் இருக்கும் ஒரு நாள் லாபம் இருக்கும் என கண்ணம்மா சொல்கிறார். மறுபக்கம் வேணு வெண்பா வெளியே வந்த செய்தியை கேட்டு அதை நினைத்து கொண்டிருக்கிறார். சௌந்தர்யா வந்து பூஜைக்கு தேவையான துணி எடுக்க போக வேண்டும். அதற்கு பாரதி கண்ணம்மாவை வர சொல்லலாம் என இருக்கேன். இத்தனை வருடம் கழித்து கண்ணம்மாவும் பாரதியும் சேர்ந்து வாழ்கின்றனர். அதனால் இந்த ஆண்டு பாரதி கையால் துணி எடுத்து கொடுக்க வேண்டும் என நினைக்கிறன் என்று சொல்கிறார்.

வெண்பா என்ன செய்து பாரதியை பிரிக்கலாம் என யோசித்து கொண்டிருக்க, மாயாண்டி வந்து திட்டம் ஒன்றை சொல்கிறார். ஆனால் வெண்பா நான் உன்னை விட ரொம்ப மோசமானவள் ஆனால் இந்த விஷயத்தில் அப்படி செய்ய முடியாது. பாரதி உடலில் பிரச்சனை என சொல்லி அவனை நம்ப வந்தேன் அது போல இப்பவும் செய்து பாரதி கண்ணம்மாவை பிரிக்க வேண்டும் என சொல்கிறார். வேணு சௌந்தர்யா பாரதி மருத்துவமனைக்கு வந்து துணி எடுக்க கடைக்கு வர சொல்கிறார்.

தமிழகத்தில் ஜன.10 வரை 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை – தமிழக அரசு உத்தரவு!

ஆனால் பாரதி எனக்கு வேலை இருக்கிறது என சொல்ல, சௌந்தர்யா என்னுடன் வரியா இல்லையா என கேட்கிறார். பாரதி அவர்களுடன் கடைக்கு வர ஒப்புக் கொண்டு செல்கிறார். பாரதி காரில் சௌந்தர்யா கூட வர இப்போது துணி எடுக்க வேண்டியது முக்கியமா என கேட்கிறார். ஆமாம் முக்கியம் தான் என சொல்லி நக்கலடித்து சிரிக்கிறார். சௌந்தர்யா திட்டத்தின் படி கண்ணம்மாவை துணி கடை வாசலில் நிற்க சொல்கிறார். அப்போது வந்த பாரதி கண்ணம்மாவை பார்த்து நினைத்தேன் என என்னை மருத்துவமனைக்கு சென்று கூட்டிக் கொண்டு வரும் போதே எதாவது இது போல நடக்கும் என நினைக்கிறார்.

வா உள்ளே போகலாம் என பாரதியை சௌந்தர்யா கூப்பிட பாரதி வரமாட்டேன் என சொல்கிறார். சௌந்தர்யா வா என கூப்பிட இவ எதற்கு இங்கே வந்திருக்கா என கேட்கிறார். வீட்டில் எல்லாருக்கும் துணி வாங்க போறோம். அப்போது கண்ணம்மாவிற்கு துணி எடுக்க வேண்டாமா என கேட்கிறார். அன்னைக்கு அஞ்சலியை கண்ணம்மா தான காப்பாற்றினால், அன்று ஹேமாவை கூட கண்ணம்மா தான் காப்பாற்றினால் அதற்கு மட்டும் உனக்கு அவள் வேண்டும் என சௌந்தர்யா சொல்கிறார்.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!