நிகிலாவின் தற்கொலை குறித்து உண்மையை சொன்ன பாக்கியா, கோவத்தில் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
நிகிலாவின் தற்கொலை குறித்து உண்மையை சொன்ன பாக்கியா, கோவத்தில் கோபி - இன்றைய
நிகிலாவின் தற்கொலை குறித்து உண்மையை சொன்ன பாக்கியா, கோவத்தில் கோபி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
நிகிலாவின் தற்கொலை குறித்து உண்மையை சொன்ன பாக்கியா, கோவத்தில் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா நிகிலாவிற்கு நடந்த அனைத்தையும் பத்திரையாளர்களிடம் சொல்லிவிடுகிறார். பின் போலீசார் வந்து விசாரிக்கின்றனர். டிவியில் இதெல்லாம் காட்டப்பட்டதை பார்த்து கோபி கோவமாக இருக்கிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா பத்திரிகையாளர்களிடம் எனக்கு எல்லா உண்மையும் தெரியும் என சொல்ல, அவர்கள் அனைவரும் சேர்ந்து நடந்தது என்ன என கேட்கின்றனர். அப்போது பாக்கியா இப்போது தற்கொலைக்கு முயற்சி செய்த பெண் என் மகளுடன் படிக்கிறாள். அவளுக்கு இந்த ஸ்கூலில் வேலை செய்யும் கம்ப்யூட்டர் சார் ரொம்ப டாச்சர் செய்தார் என சொல்ல, எந்த மாதிரி டாச்சர் என பத்திரிகையாளர்கள் கேட்கின்றனர். எல்லா மாதிரி டாச்சரும் செய்திருக்கார். அவளுக்கு போன் செய்வது, மெசேஜ் அனுப்புவது, புகைப்படம் அனுப்ப சொல்வது என நிறைய தொல்லை கொடுத்திருக்காரு.

சிங்கப்பூரில் இருந்து சீருடன் வந்த மீனாவின் அண்ணன், சிறப்பாக முடிந்த காது குத்து நிகழ்ச்சி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

பின் அந்த பெண் இதற்கு எல்லாம் ஒப்புக் கொள்ளாமல் இருந்தால் அவரை இந்த ஆண்டு பெயில் ஆக்கிருவேன் என சொல்லிருக்கான் என சொல்ல, என்னிடம் எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கிறது. நான் அதை தேவைப்பட்டால் போலீசிடம் காட்டுவேன் என சொல்கிறார். பின் உங்க பொண்ணு யாரு என இனியாவை காட்ட நான் எங்கே வந்து சொல்ல சொன்னாலும் சொல்வேன் பசங்களை தொந்தரவு செய்யாதீர்கள் என பாக்கியா சொல்கிறார். இந்த விஷயம் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியும் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இப்படி செய்கிறார்கள்.

இவர்களை நம்பி தான நாங்க பசங்களை அனுப்புகிறோம் என பாக்கியா சொல்கிறார். பின் கோபி வீட்டிற்கு வர அங்கே டிவியில் பாக்கியாவின் பேட்டியை பார்த்து கோபப்படுகிறார். ஜெனி யாரவது இப்படி செய்தால் தான் இது போல மீண்டும் தவறு நடக்காது என சொல்ல, செழியனும் வந்து அம்மாவிற்கு இது தேவை இல்லாத வேலை என சொல்கிறார். பின் பள்ளிக்கு போலீசார் வருகின்றனர். அவர்கள் பாக்கியா மற்றும் மற்ற மாணவிகளை கூப்பிட்டு பேச பாக்கியா ஆதாரத்தை காட்டுகிறார். பின் போலீசார் ஆதாரம் இருக்கிறது ஆனால் அந்த சார் தலைமறைவாக தான் இருக்கிறார் என சொல்கிறார்.

கண்ணம்மா நேர்மையை பார்த்து வியந்த பாரதி, குடும்பத்தை பிரிக்க வெண்பாவின் புதிய திட்டம் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

கோபி இனிமேல் பாக்கியா போலீஸ் கேஸ் என அலைய போகிறாள் சொல்வதை கேட்பதாக இல்லை. அவளால் வீட்டில் எப்போதும் பிரச்சனை தான் என சொல்ல, ராமமூர்த்தி அதான் எழில் கூட இருக்கான்ல எதுவும் நடக்காது என சொல்கிறார். பாக்கியா வர கோபி காத்திருக்க, எழிலுடன் பாக்கியா வருகிறார். கோபி கோபத்துடன் அவரை பார்க்க இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!