தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஜன.10 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் 10 வரை வரையிலான கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டு, அதற்கான புதிய வழிகாட்டுதல்களும் வெளியிட்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கட்டுப்பாடுகள் நீட்டிப்பு:
தமிழகத்தில் கடந்த மே 10ம் தேதி முதன் முதலாக அறிவிக்கப்பட்ட கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகளில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர அனுமதி அளிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர கட்டுப்பாடுகளின் விளைவால் படிப்படியாக கொரோனா பரவல் தமிழகத்தில் குறைய தொடங்கியது. இதனால் அரசு தீவிர ஆலோசனை செய்து தளர்வுகளை அளித்து வருகிறது.
தமிழகத்தில் ஜன.10 வரை 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை – தமிழக அரசு உத்தரவு!
இறுதியாக டிசம்பர் 16 முதல் 31ம் தேதி வரையான இன்று வரை கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இன்றுடன் கட்டுப்பாடுகள் முடிய விருப்பதால் அரசு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க ஆலோசனை செய்ய இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. மேலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று திடீரென்று அதிகரித்து வருகிறது, கூடுதலாக கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஓமைக்ரான் வகை பரவல் பாதிப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.
ரயில்வே நிறுவன வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்..!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள், தலைமை செயலர் இறையன்பு, சுகாதார செயலர் ராதா கிருஷ்ணன் போன்றவர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில், ஜனவரி 10ம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது என்று அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதற்கான புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. அரசின் வழிகாட்டுதல்களை மக்கள் முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய வழிகாட்டுதல்கள்:
- உணவகங்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- மெட்ரோ ரயிலில் 50% இருக்கைகளில் மட்டுமே பயணிகள் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- பொதுப்போக்குவரத்துகளில் பயணிகள் நின்று பயணிக்க அனுமதி இல்லை.
- திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- உள்விளையாட்டு அரங்கங்களில் 50% பார்வையாளர்களுடன் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும்.
- பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்களில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், உணவகங்களில் ஒரே நேரத்தில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- வழிபாட்டு தளங்களில் தற்போது உள்ள காதுகள் அப்படியே அமலில் இருக்கும்.
- அழகு நிலையங்கள், சலூன்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- ஜவுளி கடைகளில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே இருப்பதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
- திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேருக்கு மிகாமல் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- தமிழக பள்ளிகளில் 1முதல் 8ம் வகுப்புகளுக்கு ஜனவரி 10 வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கல்லூரிகள் மற்றும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசின் நிலையான வழிகாட்டுதல்களை கடைபிடித்து நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.