நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யும் ஐஸ்வர்யா, குழந்தை இல்லை என வருத்தப்படும் முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யும் ஐஸ்வர்யா, குழந்தை இல்லை என வருத்தப்படும் முல்லை - இன்றைய
நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யும் ஐஸ்வர்யா, குழந்தை இல்லை என வருத்தப்படும் முல்லை - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யும் ஐஸ்வர்யா, குழந்தை இல்லை என வருத்தப்படும் முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் கயல் பிறந்தநாள் முடிந்து கயல் அதற்குள் வளர்ந்துவிட்டாள் என சந்தோசமாக இருக்கிறார். முல்லை குழந்தை இல்லை என கதிரிடம் வருத்தப்படுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் மீனாவின் அம்மா அப்பாவை வழி அனுப்பிவிட, நாளைக்கே கயல் மொட்டை போடுவது பற்றி சொல்கிறோம் என சொல்கிறார் மூர்த்தி. பின் தனம் கயலை தூக்கி கொஞ்சுகிறார். நகையை கழட்டி பத்திரமாக வை என தனம் சொல்ல நீங்களே வைங்க என மீனா சொல்கிறார். தனம் நகையை வைக்க செல்ல, முல்லை கயலுக்கு ட்ரெஸ் மாத்த கொண்டு செல்கிறார். பின் தனத்தை பாருங்க நகையை கொடுப்பது போல கொடுத்து மீண்டும் வாங்கிட்டாங்க என சொல்ல, ஜீவா வாய்யை மூடு என சொல்கிறார்.

பின் முல்லை பாண்டியனை வைத்து கொஞ்சிக் கொண்டிருக்க கதிர் அருகில் படுத்திருக்கிறார். நமக்கும் குழந்தை வந்த பின் இப்படி தான் படுக்கும் என முல்லை சொல்ல, ஆமாம் எல்லாம் நீ நினைத்தது போல நடக்கும் அதுவரை நமக்கு பாண்டியன் இருக்கிறான் என கதிர் சொல்கிறார். அப்போது தனம் வந்து பாண்டியனை தூக்கி செல்ல, முல்லை நம்ம குழந்தையாக இருந்தால் இப்படி தூக்கி கொண்டு போகமாட்டாங்க என முல்லை வருத்தப்பட, அடுத்த வருஷம் கண்டிப்பாக நமக்கு குழந்தை பிறக்கும் என கதிர் சொல்கிறார்.

வீட்டில் பூஜைக்கு ஏற்பாடு செய்யும் சௌந்தர்யா, அக்கம்பக்கத்தினருக்கு மருத்துவம் பார்க்கும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

மீனா ஜீவாவிடம் பேசிக் கொண்டிருக்க ஜீவா பார்த்தியா என் அண்ணன் அண்ணி எப்படி செய்தார்கள் என கேட்க, மீனா அவர்கள் கயல் பிறந்தநாளுக்கு எல்லாம் செய்தார்கள் அவர்களிடம் காசு இருக்கிறது. ஆனால் நாம பாண்டியன் பிறந்தநாளுக்கு என்ன செய்ய முடியும் என மீனா கேட்கிறார். உனக்கு மாதம் 2000 ரூபாய் கொடுக்கிறார்கள் அதை சேர்த்து வைத்து கொடு என சொல்ல, மீனா அதெல்லாம் பத்தாது என சொல்கிறார். மறுநாள் தனம் எழுந்து கோலம் போட வர ஏற்கனவே கோலம் போட்டிருக்கிறது.

தனம் முல்லையை கூப்பிட ஐஸ்வர்யா டீ கொண்டுவந்து கொடுக்கிறார். தனம் நீ என்ன இவ்வளவு சீக்கரம் எழுந்திருக்க என கேட்க, முல்லை வந்து கோலம் கூட அவள் தான் போட்டால் என சொல்கிறார். ஐஸ்வர்யா தனத்திற்கு டீ கொடுக்க, மூர்த்தி எழுந்து குளிக்க செல்கிறார். அப்போது ஐஸ்வர்யா டீ கொண்டுவந்து கொடுக்க, நான் இன்னும் குளிக்கவில்லை என மூர்த்தி சொல்கிறார். குளிக்காமல் டீ குடித்தால் தான் நன்றாக இருக்கும் என ஐஸ்வர்யா சொல்ல, மூர்த்தி சரி என சொல்கிறார்.

மாநில அரசு ஊழியர்கள் சம்பளம் பெற இனி ‘இது’ கட்டாயம் – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!

அடுத்து கதிர் குளித்துவிட்டு வர ஐஸ்வர்யா டீயை நீட்டுகிறார். இது உங்க வீட்டில் போடும் இஞ்சி கசாயம் போல இருக்காது என சொல்ல, தனம் இஞ்சி கசாயமா என அதிர்ச்சி அடைகிறார். மீனா ஜீவா எங்கே என ஐஸ்வர்யா கேட்க அவர்கள் இன்னும் தூங்கி எந்திரிக்கவில்லை இரவு நேரமாக தான் தூங்கிருப்பார்கள் என தனம் சொல்கிறார். அவர்களை நல்ல டீ உடன் எழுப்ப போகிறேன் என ஐஸ்வர்யா சென்று கதவை தட்டுகிறார். மீனா யாரு என எழுந்து வர ஐஸ்வர்யா டீ உடன் நிற்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!