அமிர்தா அம்மா அப்பாவிடம் மனதில் உள்ளதை சொன்ன எழில், வருத்தத்தில் இருக்கும் குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் அமிர்தாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறன் என அமிர்தாவின் அப்பா அம்மாவிடம் நேரடியாக சொல்கிறார். பின் அமிர்தா அம்மா எழில் அமிர்தாவை திருமணம் செய்தால் கணேஷ் உடன் இருப்பது போல இருக்கும் என சொல்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் வரும் பொது அமிர்தா ஏன் பேசாமல் செல்கிறார் என அமிர்தாவின் அம்மா கேட்கிறார். உங்க இருவருக்கும் எதாவது சண்டையா என கேட்க, எழில் இதற்கு மேல் என்னால் மறைக்க முடியாது என சொல்லி உண்மையை சொல்ல வருகிறார். அமிர்தா என்ன நடக்க போகிறது என தெரியாமல் இருக்கிறார். எழில் நீங்க இவ்வளவு கேட்ட பின் என்னால் சொல்லாமல் இருக்க முடியாது என சொல்லி எனக்கு உங்களுக்கு முன்னாடியே அமிர்தாவை தெரியும் ஆனால் அமிர்தா பற்றிய உண்மை எல்லாம் எனக்கு இங்கே வந்த பின் தான் தெரியும்.
எனக்கு அமிர்தாவை பிடித்திருக்கிறது நான் அவங்களை கல்யாணம் செய்ய நினைக்கிறேன் என சொல்ல, கோவப்பட்ட அமிர்தாவின் அப்பா அம்மா கோவப்படுகிறார்கள். இந்த வீட்டை விட்டு வெளியே போ என அப்பா சொல்ல, என்ன அப்பா இப்படி சொல்றீங்க என கேட்க இனிமேல் என்னை அப்பா என்று அழைக்காதே என சொல்கிறார். அப்போது எழில் அம்மாவின் கையை பிடித்து என்னை கணேஷ் போலவே இருப்பதாக சொல்வீங்க, அதனால் நான் வாழ்க்கை முழுவதும் கணேஷ் மாதிரி இருக்க நினைக்கிறேன் என சொல்கிறார். எங்களை நினைத்து நீ அனுதாபப்பட வேண்டாம் என அப்பா சொல்ல, எழில் எனக்கு அமிர்தாவை முன்னாடியே தெரியும்.
அவங்க பழகிய விதம் உழைப்பு எல்லாம் பிடிக்கும், ஆனால் அவங்க திருமணம் முடிந்தவர்கள் என தெரிந்தும் மாறாமல் இருந்தது. பின் அவங்களுக்கு குழந்தை இருப்பது தெரிந்தும் எனக்கு அமிர்தா மீது அன்பு குறையவே இல்லை. நான் உங்க மீது வைத்துள்ளது பாசம் அதை நீங்க அனுதாபம் என நினைக்க வேண்டாம், அமிர்த வாழ்க்கையில் முடிவு செய்ய எல்லா உரிமையும் உங்களுக்கு இருக்கு, என்னை புரிந்து கொண்டு நீங்க கூப்பிட்டால் வருவேன் இல்லை என்றால் வர மாட்டேன் என எழில் கிளம்புகிறார். அமிர்தாவின் அப்பா அம்மா என்ன சொல்வது என தெரியாமல் வருத்தத்தில் இருக்கின்றனர்.
அமிர்தாவின் அம்மா, இன்னும் எத்தனை காலத்திற்கு இவங்க இருவரையும் பார்த்துக் கொள்ள முடியும், நம்ம காலத்திற்கு அப்பறம் இவங்களை யாரு பார்த்துக் கொள்வார்கள் என கேட்கிறார். நாம எப்படி அப்படி நினைத்தோம், அமிர்தாவின் படிப்பு முடியட்டும் என்று தான நினைத்தோம் என சொல்கிறார். எழில் மாதிரி பையனை நம்பி அமிர்தாவை அனுப்ப முடியும், வேறு யாரையோ எப்படி நம்ப முடியும் என கேட்கிறார். அந்த பையன் தங்கம் அவன் அமிர்தாவை கல்யாணம் செய்து கொண்டால் நம்ம கணேஷ் உடன் இருப்பது போல இருக்கலாம் என சொல்கிறார். நாம அப்படி நினைக்கிறோம் ஆனால் எழில் வீட்டில் என்ன நினைப்பார்கள் என தெரியவில்லை என சொல்கிறார்.
அப்போது எழில் அமிர்தாவிற்கு போன் செய்ய, அமிர்தா போனை எடுக்கிறார். எழில் மன்னிப்பு கேட்க, என்னை தப்பாக நினைக்காதீங்க என சொல்கிறார். அம்மா கேட்கும் போது என்னால் எதுவும் சொல்லாமல் இருக்க முடியவில்லை விருப்பம் இல்லை என்றால் இல்லை என சொல்லுங்க ஆனால் பேசாமல் இருக்காதீங்க என சொல்ல அமிர்தா போனை வைக்கிறார். எழில் வர நேரமாக பாக்கியா அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறார். பாக்கியா சாப்பிட வர சொல்ல, எழில் சந்தோசமாக இருக்கிறார். பாக்கியா எல்லா பிரச்சனையும் சரியாகிவிட்டதா என கேட்க, என் மனது படி செய்துவிட்டேன் என சொல்கிறார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்