தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? தீவிரமடையும் ஓமிக்ரான் தொற்று! பொதுமக்கள் அச்சம்!

0
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? தீவிரமடையும் ஓமிக்ரான் தொற்று! பொதுமக்கள் அச்சம்!
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? தீவிரமடையும் ஓமிக்ரான் தொற்று! பொதுமக்கள் அச்சம்!
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? தீவிரமடையும் ஓமிக்ரான் தொற்று! பொதுமக்கள் அச்சம்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாடு வேகமெடுத்து வருவதால், மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

முழு ஊரடங்கு

தற்போது 90க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அதி வேகமாக பரவிக்கொண்டிருக்கும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவிலும் அதன் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் வகையான ஒமிக்ரான் தொற்று மற்ற டெல்டா வகை வைரஸ்களை விட வீரியம் மிக்கதாகவும், வேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. இதனால் பல்வேறு உலக நாடுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த போதிலும் இதுவரை 90க்கும் மேற்பட்ட நாடுகளை இவ்வைரஸ் தாக்கி இருக்கிறது.

தமிழகத்தில் மீண்டும் கணினி அறிவியல் பாடம் கட்டாயமாக்கப்படுமா?ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை!

இந்தியாவிலும் கூட கடந்த வாரத்தில் பதிவு செய்யப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் மிக குறுகிய காலத்திலேயே 200க்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. அதிலும் குறிப்பாக டெல்லி, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸின் தாக்கம் 50க்கும் மேலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஒவ்வொரு நாளும் இரு மடங்காக அதிகரித்து வரும் இந்த வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக மாநிலங்கள் தோறும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், அவசியம் ஏற்பட்டால் மாநிலங்கள் தோறும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று அறிவுறுத்தி இருந்தார். அந்த வகையில் தமிழகத்திலும் புதிய பாதிப்புகளை பதிவு செய்துள்ள ஒமிக்ரான் அச்சம் காரணமாக வரும் நாட்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்று சொல்லப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது தான் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி இருப்பதால், இந்த ஊரடங்கு தகவல் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜீ தமிழ் சேனலில் புதிதாக ஆரம்பிக்கும் மூன்று புதிய நிகழ்ச்சி – பண்டிகைக்கால கொண்டாட்டம்!

இந்த சூழ்நிலையில் நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ வல்லுனர்களுடன் இன்று (டிச.23) முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒமிக்ரான் வைரஸின் பாதிப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு, ஊரடங்கு தொடர்பிலான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!