தமிழகத்தில் மீண்டும் கணினி அறிவியல் பாடம் கட்டாயமாக்கப்படுமா?ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை!

0
தமிழகத்தில் மீண்டும் கணினி அறிவியல் பாடம் கட்டாயமாக்கப்படுமா?ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை!
தமிழகத்தில் மீண்டும் கணினி அறிவியல் பாடம் கட்டாயமாக்கப்படுமா?ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை!
தமிழகத்தில் மீண்டும் கணினி அறிவியல் பாடம் கட்டாயமாக்கப்படுமா?ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை!

தமிழகத்தில் 2009 ஆம் ஆண்டு சமச்சீர் கல்வி முறையில் கணினி அறிவியல் பாடம் கட்டாயமாக்கப்பட்டது. தற்போது இது நீக்கப்பட்டுள்ளது. இதனை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று கணினி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.

கணினி அறிவியல் பாடம்

தமிழகத்தில் அனைத்து தனியார் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதனை அனைத்து அரசு பள்ளி மாணவ, மாணவியர்களும் கற்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தனர். இதையடுத்து 2009-ஆம் ஆண்டு சமச்சீர் கல்வி திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கட்டாயமாக்கப்பட்டது. இத்திட்டத்தில் 6 முதல் 10 மாணவர்களுக்கு 6-வது படமாக கணினி அறிவியல் கொண்டுவரப்பட்டு இதற்காக ரூ.150 கோடி செலவு செய்யப்பட்டது. இத்திட்டத்தில் மூலமாக 28 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்துள்ளார்கள்.

தமிழகத்தில் நாளை மறுநாள் (டிச.24ம் தேதி) உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

இவ்வாறு தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வி திட்டத்தை கேரளா, தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்களும் பின்பற்ற தொடங்கினர். அத்துடன் 1ம் வகுப்பு முதலே 6-வது படமாக கணினி அறிவியல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் கணினி அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றால் தான் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற முடியும் என்று கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் சேர்க்கையும் உயர்ந்துள்ளது. இந்தியாவிலே கணினி அறிவியல் கற்பித்தலில் முதல் மாநிலமாக கேரளா திகழ்கிறது. ஆனால் இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய தமிழ்நாட்டில் தற்போது கணினி அறிவியல் பாடம் கட்டாயமாக்கபடவில்லை.

தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

மேலும் கணினி ஆசிரியர்களுக்கு உரிய அரசாணை இல்லததால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களிலும் பி.எட் பட்டம் பெற்றவர்கள் வேலைவாய்ப்பற்று தங்கள் வாழ்வை இழந்துள்ளனர். அதனால் இந்த சமச்சீர் கல்வி திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். அத்துடன் கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும். அதன் மூலமாக கணினி ஆசிரியர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இவ்வாறு தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியா்கள் சங்கம் மாநில பொதுச்செயலா் வெ.குமரேசன் அவர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!