மாநில அரசு ஊழியர்கள் சம்பளம் பெற இனி ‘இது’ கட்டாயம் – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!
பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால் அம்மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை என அரசு அறிவித்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 2 டோஸ் நாடு முழுவதும் 18 வயது மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப நிலையில் தடுப்பூசிகள் பற்றிய தவறான வதந்திகளால் மக்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் சுகாதாரத்துறை தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முன் வந்தது. இதன் விளைவாக மக்கள் தடுப்பூசிகளை செலுத்துவதில் ஆர்வம் காட்டினர். இந்த தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிரான பேரயுதமாக செயல்பட்டு வருகிறது. இதனால் கொரோனா பாதிப்புகளும் இந்தியாவில் குறைந்து வருகிறது.
இனி கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கட்டாயம் – அரசு அதிரடி அறிவிப்பு!
மேலும் மத்திய அரசு 100% மக்கள் தடுப்பூசி செலுத்தியாக வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது. மூன்றாம் டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தொற்று தீவிரமடைந்துள்ளது. முதன் முதலில் இந்தியாவில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்திய மாநிலம் கர்நாடகா வந்த இருவருக்கு ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி தெலுங்கானா என அடுத்தடுத்த மாநிலங்களில் ஓமைக்ரான் வேகமெடுத்து வருகிறது.
PGTRB, SSC, TNUSRB தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகள்!
இதனால் மக்கள் பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ள விரைவாக தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. இன்னும் சிலர் முதல் டோஸ் தடுப்பூசிகளையே செலுத்தி கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் பஞ்சாப் மாவட்டத்தில் அரசு ஊழியர்களை தடுப்பூசி செலுத்த வைக்கும் நோக்கில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. எனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.