ஐஸ்வர்யாவை புகழ்ந்து பேசும் தனம், கடுப்பில் இருக்கும் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் ஐஸ்வர்யாவை புகழ்ந்து பேச மீனா அது பிடிக்காமல் இருக்கிறார். பின் அவர்களை எங்கே தங்க வைப்பது என தனம் கேட்க, மீனா தன்னுடைய ரூமை கேட்க போறாங்க என நினைத்து பயப்படுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் ஐஸ்வர்யாவை புகழ்ந்து பேச கோவப்பட்ட மீனா எல்லாம் நீயே செய்தது போல பேசாதே, சோறு அப்பளம் தான் செய்தாய் அது என்ன பெரிய விஷயமா என கேட்கிறார். நீ அது கூட செய்யவில்லை என ஜீவா சொல்ல, ஒரு நாள் உனக்கு இருக்கு நான் அப்போது வைத்துக் கொள்கிறேன் என நினைத்து கொள்கிறார். பின் தனம் கண்ணனை நினைத்து வருத்தப்படுகிறார். தனம் அடுப்படி வந்து பார்க்க, தனம் எல்லாம் வீணாக்காமல் சமைத்திருக்கிறாள்.
அவளுக்கு எல்லாம் தெரிகிறது. நல்ல சமையல் செய்கிறாள் என தனம் சொல்ல, அப்போது மீனா வந்து நீங்க மதியம் சமைத்த குழம்பு மீதமாகிவிட்டது. அதனால் சோறு முட்டை செய்தால் அவ்வளவு தான என சொல்கிறார். அவள் பாத்திரம் எல்லாம் கழுவி வைத்து எல்லா இடங்களிலும் சுத்தம் செய்து இருக்கிறாள் என சொல்ல, அவள் உங்களை சந்தோஷப்படுத்த தான் இப்படி செய்கிறாள்.இன்னும் ஒரு வாரம் போகட்டும் என மீனா சொல்கிறான். இப்போ என்ன அவளை பற்றி பேசினால் உனக்கு என்ன என கேட்க சரி அவங்களை எங்கே தங்க வைப்பது என தனம் கேட்கிறார்.
இதற்கு தான் அவங்க வீட்டில் இருக்கலாம் என சொன்னேன் என மீனா சொல்ல, இப்படியே இருந்தால் நம்ம ரூமை கொடுக்க சொல்வார்கள் என மீனா கயல் அழுகிறாள் என ஓடு சென்று ரூமில் தூங்க வைக்கிறாள். பின் தனம் முல்லையிடம் எந்த ரூமில் படுக்க வைக்கலாம் என கேட்க, ஹாலில் படுக்க வைக்கலாம் என சொல்கிறார். அவங்க புதிதாக கல்யாணம் ஆனவங்க என சொல்ல, எதாவது செய்வோம் என சொல்கிறார். பின் முல்லை தனத்தின் குழந்தையை வைத்திருக்க, கதிர் வந்து குழந்தையை தூக்க முடியாமல் இருக்கிறார்.
குழந்தையை தூக்க பயமாக இருக்கிறது என கதிர் சொல்ல, நமக்கு குழந்தை பிறந்தால் தூக்க வேண்டும். இப்பவே தூக்கி பழகி கொள்ளுங்கள் என சொல்கிறார். பின் கதிரிடம் எனக்கு பெண் குழந்தை தான் வேண்டும் என சொல்ல முன்னாள் பையன் வேண்டும் என சென்ன இப்போ என்ன மாத்திட்ட என கதிர் கேட்கிறார். நீங்க என்னை எப்படி பார்த்துக் கொள்கிறீர்களோ அது போல அந்த குழந்தையை பார்த்து கொள்வீர்கள் அதுனால் தான் என சொல்ல, குழந்தை வந்த பின் என்னை மறந்துவிட கூடாது குழந்தை தான் முக்கியம் என சொல்ல கூடாது என சொல்கிறார்.
சன் டிவியில் ராதிகா, குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன் இணையும் புதிய சீரியல் – ரசிகர்கள் உற்சாகம்!
அப்போது கதிர் நான் அப்படி தான் சொல்வேன் என சொல்கிறார். குழந்தையை தூக்க தெரியாது என சொல்லி இவ்வளவு நேரம் வைத்திருக்கீங்க என கேட்க ஆமாம் என அவன் குட்டியாக இருப்பதால் நானே வைத்திருப்பேன் என சொல்கிறார். பின் மீனா கயலை தூங்க வைக்க கதவை தட்டும் சத்தம் கேட்கிறது. மீனா பயத்தில் இருக்க, நான் தான் ஜீவா என சொல்கிறார். சீக்கிரம் உள்ளே வா என மீனா சொல்ல, லைட்டை போட்டு ஜீவா கணக்கு பார்க்கிறார். மீனா கயலை தூங்க வைக்க அவள் தூங்காமல் இருக்கிறாள். பின் தனம் கதவை தட்ட மீனா வெளியே வர சொல்லுவாங்க என பயப்படுகிறார். ஆனால் தனம் குழந்தைக்கு பசும்பால் கொடுக்க வந்ததாக சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.