ஹேமாவை பார்க்க போன பாரதி, பாரதியே தோசை சுட்டு சாப்பிட கிண்டல் செய்யும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
ஹேமாவை பார்க்க போன பாரதி, பாரதியே தோசை சுட்டு சாப்பிட கிண்டல் செய்யும் கண்ணம்மா - இன்றைய
ஹேமாவை பார்க்க போன பாரதி, பாரதியே தோசை சுட்டு சாப்பிட கிண்டல் செய்யும் கண்ணம்மா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
ஹேமாவை பார்க்க போன பாரதி, பாரதியே தோசை சுட்டு சாப்பிட கிண்டல் செய்யும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி கண்ணம்மா வீட்டில் தனியாக சமைக்க முடிவு செய்கிறார். பின் வடிவுக்கரசி பாரதி கண்ணம்மாவை சேர்த்து வைக்க புதிதாக திட்டம் ஒன்றை தீட்டுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், வேணு ஹேமாவிற்கு படிக்க சொல்லி கொடுக்க அப்போது சௌந்தர்யா வருகிறார். அவர் படிக்க சொல்லி தர ஹேமாவை பார்க்க பாரதி வருகிறார். அவர் ஹேமாவை தூரமாக இருந்து பார்த்து ரசிக்கிறார். உந்த உலகத்துலயே எனக்கு உன்னை தான் மிகவும் பிடிக்கும் ஆனால் உன்னை பிரிந்து என்னால் இருக்கவே முடியவில்லை என வருத்தப்படுகிறார். வேணு எந்திருக்கும் போது பாரதி நிற்பதை பார்க்கிறார். அவர் சௌந்தர்யாவிடம் சொல்ல, எல்லாத்தையும் இவன் கெடுத்துருவான் போல என பதட்டம் அடைகின்றனர்.

பின் ஹேமா எழுந்து செல்ல பாரதி சௌந்தர்யாவிடம் ஹேமாவை பார்க்க வந்ததாக சொல்கிறார். ஹேமாவிடம் நீ 6 மாதம் கேம்ப் போயிருக்க என சொன்னேன். ஆனால் நீ இப்போ வந்து நின்றால் நான் ஹேமாவிடம் என்ன பதில் சொல்வேன் என கேட்கிறார். நான் ஹேமாவை தான் பார்க்க வந்தேன் பார்த்துவிட்டேன் என கிளம்புகிறேன் என சொல்கிறார். லட்சுமி யாருடைய குழந்தை என அந்த கண்ணம்மா பொய் பேசியதை எல்லாம் மன்னித்துவிடுங்க என சொல்ல, அதெல்லாம் பழைய கதை அதை எல்லாம் பேசி முடித்துவிட்டாச்சு என சொல்கிறார்.

சன் டிவியில் ராதிகா, குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன் இணையும் புதிய சீரியல் – ரசிகர்கள் உற்சாகம்!

கண்ணம்மா பாரதி வருவதற்காக காத்துக் கொண்டிருக்க, பாரதி வருகிறார். இவ்வளோ நேரம் சென்று வரீங்க சாப்பாடு சாப்பிடவில்லையா என கேட்கிறார். சாப்பிட தான் போகிறேன் என சொல்லி உள்ளே சென்று தோசை ஊதுகிறார். கண்ணம்மா அதை பார்த்து இது தோசையா என நினைக்கிறார். பின் பாரதி எவ்வளவு அருமையாக இருக்கு என் கை பக்குவம் என சொல்கிறார். பாரதி இவ்வளவு நன்றாக தோசை சுட்ருக்கேன் என பெருமையாக சொல்ல, கண்ணம்மா இது நான் அரைத்து விற்ற மாவு என சொல்கிறார்.

பாரதி வேற வழி எதுவும் இல்லாமல் சாப்பிடுகிறார். பாரதியை தோசை மாஸ்டர் என கண்ணம்மா கிண்டல் செய்ய, பாரதி இவளிடம் அசிங்கப்பட்டேன் என நினைக்கிறார். வக்கீல் வடிவுக்கரசி அப்போது வர பாரதி மூஞ்சியை திருப்பிக் கொள்கிறார். வீட்டில் பால் காய்ச்ச நிறைய சொந்தக்காரங்க வந்துருக்காங்க அவங்களுக்கு படுக்க இடம் இல்லை, அதனால் இங்கே படுக்க வைக்கலாமா என வடிவுக்கரசி கேட்க, பாரதி முடியாது என சொல்ல சொல்கிறார். நீங்க இரண்டு பேரும் ரூம்மில் தான படுப்பீங்க அதனால் அவங்க ஹாலில் படுக்க வைக்கவா என கேட்கிறார்.

விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சிவகாமி வீட்டில் நடந்த சோகம் – தந்தை மரணம்! ரசிகர்கள் இரங்கல்!

அப்போது கண்ணம்மா ஹாலில் நான் தூங்குவேன். ரூமிற்குள் அவர் தூங்குவார் என சொல்ல, கோவப்பட்ட வடிவுக்கரசி இருவரும் தனியாக இருந்து கோர்ட்டை ஏமாற்றுறீர்களா உங்களை இப்பவே நீதிபதி அம்மாவிடம் சொல்கிறேன் என மிரட்டுகிறார். கண்ணம்மா பாரதி வேண்டாம் என சொல்ல, நாங்க உள்ளே சென்று தூங்குகிறோம் என சொல்கிறார். இன்னைக்கு மட்டும் இல்லை இனிமேல் தினமும் ஒன்றாக தூங்க வேண்டும் என வடிவுக்கரசி சொல்கிறார். அப்பறம் என்ன எங்க சொந்தக்கரவங்க வந்து படுக்க சொல்கிறேன் என சொல்ல சரி என பாரதி சொல்கிறார். பின் வடிவுக்கரசியின் சொந்தங்கள் வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!