விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சிவகாமி வீட்டில் நடந்த சோகம் – தந்தை மரணம்! ரசிகர்கள் இரங்கல்!

0
விஜய் டிவி 'ராஜா ராணி 2' சிவகாமி வீட்டில் நடந்த சோகம் - தந்தை மரணம்! ரசிகர்கள் இரங்கல்!
விஜய் டிவி 'ராஜா ராணி 2' சிவகாமி வீட்டில் நடந்த சோகம் - தந்தை மரணம்! ரசிகர்கள் இரங்கல்!
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சிவகாமி வீட்டில் நடந்த சோகம் – தந்தை மரணம்! ரசிகர்கள் இரங்கல்!

விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் நடிக்கும் நடிகை ப்ரவீனா வீட்டில் நடந்துள்ள சோக நிகழ்வு குறித்து, தற்போது செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து நடிகையும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

நடிகை ப்ரவீனா:

சின்னத்திரையில் ஹீரோயின்களுக்கு எந்த அளவிக்ரு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே வகையில், மாமியார் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்த வரிசையில் ரோஜா சீரியல் காயத்திரி, பாரதி கண்ணம்மா சீரியல் சௌந்தர்யா, ராஜா ராணி 2 சீரியல் சிவகாமி போன்றவர்கள் மக்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்படும் மாமியார் கதாபாத்திரங்களை செய்து வருகின்றனர். ராஜா ராணி 2 சீரியலில் நடிக்கும் நடிகை ப்ரவீனா தற்போது அதிலும் மிகவும் பிரபலமாக உள்ளார். தன் மருமகள் என்ன செய்தாலும் அது தவறு தான் என்று எண்ணும் மாமியார்.

விஜய் டிவியின் ‘ஈரமான ரோஜாவே 2’ சீரியலில் ஜோடிகளாக இணையும் பிரபலங்கள் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

நடிகை ப்ரவீனா கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் சமீபத்தில் கோமாளி, டெடி போன்ற படங்களில் கதாநாயகனின் அம்மாவாக நடித்திருந்தார். லாபம் படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் இருந்து வருகிறார். இவர் கேரள அரசின் 4 மாநில அரசு விருதுகளை பெற்றுள்ளார். அதில், 2 சிறந்த நடிகைக்கான விருதையும், 2 பெஸ்ட் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பணிக்காகவும் பெற்றுள்ளார். தமிழில் மகாராணி, மகராசி, ப்ரியமானவளே, தற்போது ராஜா ராணி 2 சீரியலிலும் நடித்து வருகிறார்.

பாக்கியாவின் கடை திறப்பு விழாவுக்கு வரும் ரஞ்சித், பிரியா ராமனை தடுக்கும் கோபி – ஸ்பெஷல் எபிசோடு!

இவரது அப்பா தான் தற்போது காலமாகியுள்ளார். இவரது அப்பா ஒரு கல்லூரியின் பேராசிரியராக பணியாற்றியவர் என்றும், அவரது பெயர் ராமச்சந்திரா நாயர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடிகை ப்ரவீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் என் அப்பா, என் குரு கடவுளின் சொர்க்க கதவுகள் திறந்துள்ளதால் சொர்க்கத்திற்கு சென்று விட்டார் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் தான் மிகவும் வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் அவரது மறைவிற்கு இரங்கலையும், ப்ரவீணாவிற்கு ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!