ராதிகாவை திருமணம் செய்து கொள்வேன் என வாக்குறுதி கொடுத்த கோபி, கணவரை பற்றி பெருமையாக பேசிய பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
ராதிகாவை திருமணம் செய்து கொள்வேன் என வாக்குறுதி கொடுத்த கோபி, கணவரை பற்றி பெருமையாக பேசிய பாக்கியா - இன்றைய
ராதிகாவை திருமணம் செய்து கொள்வேன் என வாக்குறுதி கொடுத்த கோபி, கணவரை பற்றி பெருமையாக பேசிய பாக்கியா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
ராதிகாவை திருமணம் செய்து கொள்வேன் என வாக்குறுதி கொடுத்த கோபி, கணவரை பற்றி பெருமையாக பேசிய பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா முதன்முதலில் பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுப்பதால் பதட்டமாக இருக்கிறார். ராதிகாவை பார்த்த கோபி என் குடும்பத்தை விட்டு வந்து உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என வாக்குறுதி கொடுக்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவை இன்டெர்வியூ எடுக்க பத்திரிகையாளர்கள் வருகின்றனர். அப்போது பாக்கியா வேலை செய்யும் இடம் என புகைப்படங்களை குடும்பத்துடன் எடுத்துக் கொள்கின்றனர். பின் பாக்கியாவை கேமரா முன்னால் பேச சொல்ல, பாக்கியா முதன்முறை என்பதால் பேச முடியாமல் இருக்கிறார். பின் எழில் தைரியம் சொல்ல, பாக்கியா தைரியமாக பேசுகிறார். பின் கோபி மருத்துவமனையில் இருக்க மயூரா அழுது கொண்டே இருக்கிறார். கோபி என்ன நடந்தது என கேட்க, அவங்களுக்கு காலில் அடிபட்டுள்ளது என நர்ஸ் சொல்கிறார்.

ராதிகாவை பார்க்க மயூரா அழுது கொண்டே இருக்க ராதிகா எனக்கு ஒன்றுமில்லை என சொல்கிறார். உனக்கு எப்படி தெரியும் என கேட்க, உங்க ஆபிசில் இருந்து போன் வந்தது. அந்த நேரம் பாட்டி கடைக்கு சென்றிருந்தார். அதனால் நான் அங்கிளிற்கு போன் செய்தேன் அவங்க தான் என்னை கூட்டிக் கொண்டு வந்தார். பாட்டி தேடுவாங்களே என கேட்க, பாட்டிக்கு போன் செய்து சொல்லியாச்சு என கோபி சொல்கிறார். டாக்டர் கோபியை அழைக்க அவர் சென்று பேசிவிட்டு வருகிறார்.

ஐஸ்வர்யாவை புகழ்ந்து பேசும் தனம், கடுப்பில் இருக்கும் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

எதுவும் பிரச்சனை இல்லை,என்று சொன்னதாகவும், இனிமேல் நீ பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என சொல்கிறார். கோபி ராதிகாவிடம் என்னிடம் பேசமாட்டிய, என் அப்பா செய்தது தப்பு தான் உனக்கு என்னை பார்த்தால் பிடிக்காது. அதனால் தான் நான் வராமல் இருந்தேன் ஆனால் எனக்கு உயிரே இல்லை என கோபி சொல்கிறார். இனிமேல் என் அப்பா வந்தாலும் சரி யாரு வந்தாலும் சரி உன்னை பிரிந்து இருக்க முடியாது என கோபி பேச, ராதிகா அதிர்ச்சி அடைகிறார். பின் ராதிகா அம்மா வர, கோபியை பார்த்து நான் இல்லாத நேரம் இப்படி நடந்துவிட்டது அதனால் தான் மயூ உங்களுக்கு போன் செய்தாள் இனி நான் வந்துவிட்டேன் நீங்க கிளம்புங்கள் என சொல்கிறார்.

கோபி முடியாது என சொல்ல, ராதிகாவை இந்த நிலைமையில் விட்டுவிட்டு போக மாட்டேன் என கோபி உறுதியாக சொல்ல, யார் என்ன சொன்னாலும் நான் இனிமேல் ராதிகாவை பார்க்க வருவேன் என சொல்ல, நீங்க வருவீங்க பின்னாடி உங்க அப்பா வந்து சண்டை போடுவார் என சொல்ல, நான் யார் வந்தாலும் வருவேன் என சொல்கிறார். உங்களால் தான் ராதிகாவுக்கு இந்த நிலைமை என சொல்ல, எனக்கு குடும்பம் இருக்கிறது அது உண்மை தான் ராதிகாவிற்காக என் குடும்பத்தை விட்டு வருகிறேன் என சொல்கிறார். இது தான் உங்க முடிவு என்றால் இதை எப்பவோ செய்திருப்பீங்க ஏன் செய்யவில்லை என கேட்க, ராதிகா தான் எனக்கு முக்கியம் என் குடும்பத்தை விட்டு வந்து ராதிகாவை நான் கல்யாணம் செய்து கொள்வேன்.

அப்பறம் என்னை நீங்க பார்க்க கூடாது என சொல்லமாட்டீங்க என கேட்கிறார். உண்மையாகவே இவங்க இவருக்காக நான் என்ன வேணாலும் செய்வேன். என்னை பொறுத்தவரை ராதிகா மயூரா தான் முக்கியம் என சொல்கிறார். மயூரா அதை எல்லாம் கேட்டுவிட்டு நிற்க கோபி அவரை அணைத்து கொள்கிறார். பாக்கியா பத்திரிகையாளரிடம் என் கணவர் பற்றி சொல்ல வேண்டும் அவரு என்னை போல இல்லை. நிறைய படித்தவர். பெரிய அலுவலகம் நடத்தி வருகிறார். படிக்காத என்னை திருமணம் செய்து என்னை ரொம்ப சந்தோசமாக வைத்திருக்கிறார். அவரே பெரிய ஆளாக இருக்கும் போது என்னை இப்படி வேலை செய்ய ஊக்குவிப்பாக இருந்தார். எனக்கு அவர் தான் துணையாக இருந்தார் அவர் இல்லாமல் என்னால் எதுவும் செய்திருக்க முடியாது என சொல்கிறார்.

ஹேமாவை பார்க்க போன பாரதி, பாரதியே தோசை சுட்டு சாப்பிட கிண்டல் செய்யும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

பத்திரிகையாளர்கள் அருமையாக பேசுனீங்க என சொல்ல, ஈஸ்வரி இது எப்போது டிவியில் வரும் என கேட்கிறார். இது முதலில் எங்க பத்திரிகையில் வரும் பின் எங்க சேனலில் வரும் என சொல்கிறார். அப்போ டிவியில் வராதா என கேட்க, அவங்க சொன்னது டிவியில் வரும் என சொல்கிறார். இன்னும் பெரிய இன்டெர்வியூ எல்லாம் கொடுக்க வேண்டும் என ராமமூர்த்தி சொல்ல, அப்போ கூட ஈஸ்வரி பாக்கியாவை மட்டம் தட்டி பேசுகிறார். பின் செல்வி போன வருஷம் எப்படி இருந்தோம் இப்போது எப்படி இருக்கிறோம் என சந்தோசமாக பேசுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!