வீட்டிற்கு தெரியாமல் கதிர் கடைக்கு வந்த ஐஸ்வர்யா & மீனா, கடையை பற்றி கண்ணனிடம் விசாரித்த மூர்த்தி – இன்றைய எபிசோட்!

0
வீட்டிற்கு தெரியாமல் கதிர் கடைக்கு வந்த ஐஸ்வர்யா & மீனா, கடையை பற்றி கண்ணனிடம் விசாரித்த மூர்த்தி - இன்றைய எபிசோட்!
வீட்டிற்கு தெரியாமல் கதிர் கடைக்கு வந்த ஐஸ்வர்யா & மீனா, கடையை பற்றி கண்ணனிடம் விசாரித்த மூர்த்தி - இன்றைய எபிசோட்!
வீட்டிற்கு தெரியாமல் கதிர் கடைக்கு வந்த ஐஸ்வர்யா & மீனா, கடையை பற்றி கண்ணனிடம் விசாரித்த மூர்த்தி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிர் கடை திறப்பு விழாவிற்கு கஸ்தூரியும் ஐஸ்வர்யாவும் வீட்டிற்கு தெரியாமல் வருகின்றனர், பின் கண்ணன் மீனாவிடம் கடை நன்றாக இருப்பதாக சொல்ல மீனாவும் பார்க்க செல்கிறார். வீட்டில் அனைவரும் கதிர் கடைக்கு சென்றுவிட மூர்த்தி கண்ணனிடம் கடை பற்றி கேட்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில்,கதிர் கடை திறப்பு விழாவிற்கு கண்ணன் சென்றுவிட்டு வர மீனா கடை எப்படி இருக்கிறது என கேட்கிறார். நான் நண்பரை பார்க்க தான் போனதாக சொல்ல, எல்லாம் எனக்கு தெரியும் என மீனா சொல்கிறார். பின் கண்ணன் கடைவீதி அருகே இருப்பதால் கடை அருமையாக இருக்கிறது என சொல்கிறார். மீனா நான் சின்ன கடையாக நினைத்தேன் என சொல்ல, அப்படி எல்லாம் இல்லை சேர் எல்லாம் போட்டு அருமையாக இருக்கிறது. அதை விட சாப்பாடு அருமையாக இருக்கிறது என சொல்கிறார். நீ சொல்வதை எல்லாம் பார்த்தால் எனக்கு கடைக்கு போக வேண்டும் என ஆசையாக இருப்பதாக சொல்ல, கண்ணன் நீங்க போய்விட்டு வாங்க என சொல்கிறார்.

மாமா வீட்டில் இருக்காங்களே என்ன சொல்வது என கேட்க, எதாவது சொல்லிவிட்டு போங்க என கண்ணன் சொல்கிறார். பின் மூர்த்தி வர மீனா, மாமா நான் கடைக்கு போய்விட்டு வருகிறேன் என பொய் சொல்லிவிட்டு வருகிறார். பின் கஸ்தூரியும் ஐஸ்வர்யாவும் கதிர் கடைக்கு சென்று கொண்டிருக்க ஐஸ்வர்யா மாமா திட்டுவாரா? என பயத்தில் இருக்கிறார். அப்போது கஸ்தூரி ஏன் கதிர் வந்து சொல்லவில்லையா என கேட்க அவங்க யாரும் வரவில்லை, முருகன் மாமா தான் வந்து கூப்பிட்டார் என சொல்கிறார். எனக்கு பயமாக இருப்பதாக ஐஸ்வர்யா சொல்ல கஸ்தூரி அதெல்லாம் பயப்படாதே என சொல்கிறார்.

பின் ஐஸ்வர்யா தோழி ஒருவர் வந்து பேசுகிறார். என்ன அடையாளம் தெரியவில்லையா என கேட்க, நான் தான் மாலதி என சொல்கிறார். உன்ன தெரியாமல் இருக்குமா என ஐஸ்வர்யா கேட்க, கஸ்தூரியிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். நாங்க இருவரும் பியூடிசன் படித்தோம் என சொல்ல கஸ்தூரி உனக்கு கல்யாணம் ஆகி விட்டதா என கேட்கிறார். இல்லை இன்னும் 10 நாளில் கல்யாணம் என சொல்ல, நீ படித்துவிட்டு பார்லர் வைக்கவில்லையா என மாலதி கேட்கிறார். இல்லை என ஐஸ்வர்யா சொல்ல, நீ பார்லர் வைத்து இருந்தியா என கேட்கிறார். அப்போது ஆமாம் இப்போது காலி செய்துவிட்டதாக தோழி சொல்ல ஐஸ்வர்யா பேசாமல் எனக்கு கொடுத்துவிடு என சொல்கிறார்.

கஸ்தூரி நீ வீட்டில் சும்மா இருப்பதற்கு எதாவது செய்யலாம் என சொல்ல ஆமாம் என ஐஸ்வர்யா சொல்கிறார். பின் கதிர் கடைக்கு ஒரு சிலர் சாப்பிட வருகின்றனர். பின் அவர்கள் சாப்பிட்டு விட்டு சாப்பாடு நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள். பின் கஸ்தூரியும் ஐஸ்வர்யாவும் சாப்பிட வருகின்றனர். கதிர் முல்லை அவர்களை பார்த்து சந்தோசப்படுகிறார். பின் இருவரும் வீட்டில் பொய் சொல்லிவிட்டு வந்ததாக சொல்கிறார்கள். முல்லை அவர்களை சாப்பிட சொல்லி சாப்பாடு வைக்கிறார். அந்த நேரம் பார்த்து மீனாவும் வருகிறார். மீனா இந்த பக்கம் வந்ததாக சொல்ல கடை நன்றாக இருப்பதாக சொல்கிறார். பின் அவரும் சாப்பிட அமருகிறார்.

கோபியை வீட்டை விட்டு போக சொல்லும் தாத்தா, பாக்கியாவிடம் பணம் கேட்கும் கோபி – இன்றைய எபிசோட்!

அந்த நேரம் ஐஸ்வர்யா மீனாவை பார்த்துவிட்டு தப்பித்து போக நினைக்க, ஆனால் மீனாவும் ஐஸ்வர்யாவும் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றனர். மீனா வீட்டில் பொய் சொல்லிவிட்டு இங்கே வந்து இருக்கீங்க என கேட்க நீங்களும் அப்படி தான வந்துருக்கீங்க என கேட்கிறார். சரி விடு இருவரும் வீட்டில் சொன்னால் மாட்டிக் கொள்வோம் இதை இப்படியே விட்டுவிடலாம் என சொல்கிறார். மறுபக்கம் கண்ணன் குழந்தைகளை தூங்க வைக்கிறார். அப்போது மூர்த்தி வந்து வீட்டில் யாருமே இல்லை காலையில் இருந்து வீட்டில் எல்லாருக்கும் வேலையாக இருப்பதாக சொல்கிறார். பின் கண்ணனிடம் சாப்பாடு எப்படி இருந்தது என கேட்க நான் நண்பனை தான் பார்த்தேன் என கண்ணன் சமாளிக்கிறார். ஆனால் மூர்த்தி கதிர் கடையில் சாப்பாடு எப்படி இருந்தது என கேட்க கண்ணா மாட்டிக் கொண்டதாக நினைக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!