கோபியை வீட்டை விட்டு போக சொல்லும் தாத்தா, பாக்கியாவிடம் பணம் கேட்கும் கோபி – இன்றைய எபிசோட்!

0
கோபியை வீட்டை விட்டு போக சொல்லும் தாத்தா, பாக்கியாவிடம் பணம் கேட்கும் கோபி - இன்றைய எபிசோட்!
கோபியை வீட்டை விட்டு போக சொல்லும் தாத்தா, பாக்கியாவிடம் பணம் கேட்கும் கோபி - இன்றைய எபிசோட்!
கோபியை வீட்டை விட்டு போக சொல்லும் தாத்தா, பாக்கியாவிடம் பணம் கேட்கும் கோபி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா கோபி உடைகளை எடுத்து கொண்டு வர கோபி அதை பார்த்து பயங்கர கோவமாக இருக்கிறார். ராமமூர்த்தி பாக்கியாவின் முடிவு நல்ல முடிவு என சொல்ல, கோபி நான் வெளியே போக வேண்டும் என்றால் 40 லட்சம் பணம் வேண்டும் என கேட்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா கோபியின் உடைகளை எடுத்து வைத்திருக்க கோபி அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பின் கோபி பாக்கியா மீது பயங்கர கோவத்தில் இருக்க, ராமமூர்த்தி சபாஷ் பாக்கியா என கோபியை பார்த்து நக்கலாக சிரிக்கிறார். பின் பாக்கியா கோபியை முறைத்து கொண்டு வர, இப்போ தான் நீ என்னுடைய மருமகள் என ராமமூர்த்தி கோபியை வெளியே போக சொல்கிறார். அப்போது கோபி பயங்கர கோவத்தில் பாக்கியாவை அடிக்க வருகிறார். ஆனால் தாத்தா கோபியை தடுத்து விடுகிறார். எவ்வளவு திமிரு என சொல்லி கோபி சத்தம் போடுகிறார். கோர்ட்டில் வீர வசனம் பேசினாய் இப்போது நான் ஏன் வெளியே போக வேண்டும் என கோபி கேட்கிறார்.

பின் ஈஸ்வரி என் புள்ளையை வெளியே போக சொல்லும் அளவிற்கு உனக்கு அவ்வளவு திமிரு வந்துவிட்டதா ரொம்ப தவறு அவன் என்ன தப்பு செய்திருந்தாலும் அவன் தான் இந்த குடும்பத்தின் தூண் அவனை சாய்க்க நினைக்காதே என சொல்கிறார். நம்ம பாக்கியா தான என பேசினால் நீ அளவுக்கு அதிகமாக சென்று கொண்டிருக்கிறாய் என ஈஸ்வரி சொல்கிறார். அப்போது கோபி நீங்க பொறுமையாக இருங்க அம்மா இவளுக்கு ஆணவம் எல்லாம் சேர்த்து பேய் பிடித்து இருக்கிறது என கோபி சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

இந்த பேய் இருக்கும் வரை அடங்கமாட்டாள் என சொல்கிறார். நானும் போனால் போகட்டும் என இருந்தால் இவளுக்கு திமிரு வந்துவிட்டது. எல்லார் வீட்டிலும் இதான் நடக்கிறது. இவள் செய்ததை மட்டும் தியாகி லிஸ்டில் வைக்க முடியுமா என கேட்க பாக்கியா நான் யாரையும் வெளியே போக சொல்லவில்லை என சொல்ல, அப்போ இதற்கு என்ன அர்த்தம் என கோபி கேட்கிறார். நமக்கு விவாகரத்து ஆகிவிட்டது அதனால் இனிமேல் என் ரூமில் உங்களுடன் இருக்க முடியாது என சொல்ல, என்ன உரிமையில் இது உன் வீடு என கோபி கேட்கிறார்.

உங்க கழுத்தில் தாலி கட்டி கொண்டேனே அந்த உரிமை, உங்களுக்கு 3 புள்ளைகளை பெற்று கொடுத்தேனே அந்த உரிமை, இந்த வீட்டில் அனைவர் மீதும் உயிர் வைத்து பார்த்து கொண்டேனே அந்த உரிமை என சொல்கிறார். நீங்க என்னை ஏமாற்றியது தெரிந்தும் மரியாதையை கொடுத்து பேசி இருக்கேனே அந்த உரிமை என சொல்கிறார். ஒரு நாள் எனக்கு என்ன பிடிக்கும் என கேட்டு இருக்கீங்களா, அல்லது எனக்கு இது தான் பிடிக்கும் என சொல்லி இருக்கீங்களா என கேட்கிறார். பின் பாக்கியா இந்த வீட்டில் பேன் போல நானும் இருந்தேன் என சொல்கிறார்

அதெல்லாம் விடு நீ முதலில் வெளியே போ என கோபி சொல்ல, பாக்கியா நான் என்ன தப்பு செய்தேன் என கேட்கிறார். எனக்கு கோர்ட் எங்கே இருக்கு என தெரியாது நீங்க கேட்டதை நான் கொடுத்தால் எனக்கு திமிரா என கேட்கிறார். என்ன இத்தனை நாள் அமைதியாக இருந்தேன் இப்போது எல்லாம் பேசுறேன் என நினைக்கிறீர்களா எனகேட்க கோபி அதெல்லாம் விடு நீ முதலில் வீட்டை விட்டு வெளியே போ என சொல்கிறார். நான் ஏன் செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டும் என கேட்கிறார். இது என்னுடைய வீடு நான் வாழ்ந்த வீடு 3 புள்ளைகளை பிடித்த வீடு என சொல்கிறார்.

P.hd பட்ட படிப்புகளில் சேர விரும்புவோர் கவனத்திற்கு – அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு!

எனக்கு இந்த வீட்டில் எல்லா உரிமையும் இருக்கிறது என சொல்கிறார். நான் அதை விட்டு கொடுக்க மாட்டேன், இனியாவிற்கு அம்மா என்ற பொறுப்பில் இருந்து நான் எப்படி விலகுவேன் என கேட்க, என்ன டிராமா போடுகிறாய் கோர்ட்டில் விவாகரத்து வாங்கினாய் இப்போது என்ன என கேட்க ஆமாம் உங்க கண்ணனுக்கு அப்படி தான் தெரியும் என பாக்கியா சொல்கிறார். உங்களுக்கு தான் பொறுப்பு இல்லையே என கேட்க, கோபி ஆமாம் பொறுப்பு இல்லை அப்பறம் என்ன கிளம்பு என சொல்கிறார். உங்களுக்கும் எனக்கும் தான் எதுவும் இல்லை என ஆகிவிட்டதே என கேட்க ஆமாம் எதுவும் இல்லை நீ கிளம்பு என சொல்கிறார்.

உடனே தாத்தா நீ எதுவும் பேசாதே இந்த வீட்டை விட்டு கிளம்பு என சொல்கிறார். ஈஸ்வரி என்னங்க என்ன பேசுறீங்க என கேட்க, நீ அமைதியாக இரு என தாத்தா சொல்கிறார். பின் செழியன் தாத்தா என கேட்க டேய் நீ பேசாதே என தாத்தா சொல்கிறார். பின் கோபி இவ்வளவு தூரம் ஆன பின்னால் நானும் வெளிப்படையாக கேட்கிறேன் இந்த வீட்டிற்கு பல ஆண்டுகளாக பணம் கட்டி மொத்தம் 40 லட்சம் கொடுத்திருகேன் அதை கொடு என சொல்ல எல்லாரும் அதிர்ச்சி அடைகிறார்கள். நான் வெளிப்படையாக பேசுகிறேன் என்னை தான வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறாய் என கேட்க நான் அப்படி சொல்லவில்லை என பாக்கியா சொல்கிறார். ஆனால் கோபி அதை நம்பாமல் இருக்க, உன் ஆசைப்படி நான் வெளியே போறேன் ஆனால் அப்படியே போக முடியாது என கோபி சொல்கிறார்.

ஒருத்தவன் கஷ்டப்பட்டு வீட்டை காட்டுவான் நீங்க நோகாமல் வாங்கி கொண்டு செல்வீர்களா என கேட்கிறார். ஏற்கனவே என் அப்பாவின் சொத்து எல்லாம் வாங்கி விட்டாய் இப்போது என் பணத்தை கொடு நான் கிளம்புகிறேன் என சொல்கிறார். ஜெனி ஆன்டியிடம் எப்படி அவ்வளவு பணம் இருக்கும் என கேட்க அதை பற்றி எனக்கு கவலை இல்லை என் பணத்தை எப்போது கொடுக்கிறாய் என கோபி கேட்கிறார். உங்களுக்கு பணம் தான வேண்டும் 40 லட்சத்தை நானே கொடுக்கிறேன் என பாக்கியா சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!