தமிழில் எழுத படிக்க தெரிந்தால் ரூ.58,600/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
தாளம், வேதபாராயணம் & தொழில்நுட்ப உதவியாளர் போன்ற பல பணியிடங்களை நிரப்ப மதுரை அருள்மிகு மீனாட்சி சந்தரேசுவரர் திருக்கோயிலில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. மேற்கண்ட பதவிகளுக்கு என மொத்தம் 18 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தாளம் – 01, வேதபாராயணம் – 02, உபகோயில் ஒதுவார் – 01, உதவி பரிசாரகர் – 04, உதவி யானைப் பாகன் – 01, கருணை இலக்கக் காப்பாளர் – 01, கால்நடை பராமரிப்புத் தொழிலாளர் – 02, தொழில்நுட்ப உதவியாளர் – 01, ஜெனரேட்டர் ஆப்ரேட்டர் – 01, பிளம்பர் – 01, சமையல்காரர் – 01, உதவி சமையல்காரர் – 01, துப்புரவு – 01 என மொத்தம் 18 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் சான்றிதழ் பெற்றவராக, பட்டம் பெற்றவராக மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்களாகவும், இந்து மதத்தை பின்பற்றுபவராகவும் தமிழ்நாட்டைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்று 18 வயது நிறைவடைந்தவராகவும் 35 வயது நிறைவடையாதவராகவும் இருக்க வேண்டும். கருணை இல்லக் காப்பாளர் பதவிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
மேற்கண்ட பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் பணிக்கு ஏற்றாற் போல் சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதாவது, தாளம் – ரூ.18500-58600, வேதபாராயணம் – ரூ.15700-50,000, உபகோயில் ஒதுவார் – ரூ.12600-39900, உதவி பரிசாரகர் – ரூ.10000-31500, உதவி யானைப் பாகன் – ரூ.11600-36800, கருணை இலக்கக் காப்பாளர் – ரூ.15900-50400, கால்நடை பராமரிப்புத் தொழிலாளர் – ரூ.10,000-31500, தொழில்நுட்ப உதவியாளர் – ரூ.20600-65500, ஜெனரேட்டர் ஆப்ரேட்டர் – ரூ.16600-52400, பிளம்பர் – ரூ.18000-56900, சமையல்காரர் – ரூ.19200-11900, உதவி சமையல்காரர் – ரூ.11600-36800, துப்புரவு – ரூ.10000 – 31500.
JIPMER பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் ரூ.31,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
விண்ணப்பிக்கும் முறை:
தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று அதை பூர்த்தி செய்து அலுவலகத்திற்கு நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும். 18.08.2022 அன்றைய நாள் வரை மட்டுமே விண்ணப்பங்கள் அலுவலகத்தில் வழங்கப்படும்.
நான் நன்றகா தமிழ் படிப்பேன்