முல்லைக்கு பணம் செலவானதை தெரிந்து அதிர்ச்சி அடையும் பார்வதி, கடன் பற்றி தெரிந்து கொண்ட கதிர் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் அம்மா வீட்டிற்கு வர அங்கே 3 மருமகள்களும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் நீ மட்டும் இப்படி வேலை பாக்கிறாய் என கேட்கிறார். பின் முல்லைக்கு எவ்வளவு பணம் செலவானது என தனத்தின் அம்மா கேட்கிறார். அப்போது 5 லட்சம் என சொல்ல அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனத்தை பார்க்க அவரது அம்மா வர அப்போது தனம் மட்டும் வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறார் என சொல்கிறார். அப்போது அவரது அம்மா வீட்டில் வந்த 3 மருமகளும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் நீ மட்டும் வேலை செய்கிறாய் என சொல்கிறார். அப்போது தனம் இவ்வளவு நேரம் ஐஸ்வர்யா இங்கே தான் இருந்தாள் எதையும் பார்க்காமல் பேசாதே என சொல்கிறார். அப்போது தனத்தின் அம்மா ஜனாவிடம் காசு கேட்டார் அவர் இல்லை என சொல்லிட்டான் இப்போது காசுக்கு என்ன பண்ணீங்க என கேட்க கடன் வாங்கியதாக சொல்கிறார். அப்போது அவ்வளவு கடனா என கேட்க அதை எல்லாம் கதிர் பின்னால் நின்று கேட்கிறார்.
TN Job “FB Group” Join Now
எல்லாரும் பணம் வாங்கியதை நினைத்து வருத்தப்படுவதாக கதிர் நினைக்கிறார். பின் மீனாவிடம் எவ்வளவு பணம் வாங்கி இருக்கீங்க என கேட்க 5 லட்சம் என மீனா சொல்கிறார். அதை எல்லாம் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். பின் கடையில் கதிர் இருக்க வியாபாரி ஒருவர் பணம் கேட்டு போன் செய்கிறார். அப்போது கதிர் வந்து பணத்தை கொடுங்கள் அவர் கேட்பதாக சொல்கிறார். ஆனால் பணமில்லை என மூர்த்தி சொல்ல எங்கே என கேட்கிறார். அப்போது ஜீவா முல்லைக்கு டிரீட்மென்ட்க்கு எடுத்திருக்கிறது என சொல்கிறார். வியாபார பணத்தை எதற்கு எடுத்தீங்க என கேட்க, அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார்.
கதிர் வருத்தப்பட நீ எங்களுக்கு ஒன்று என்றால் எப்படி பார்த்துக் கொள்வாய் நாங்க பார்க்க கூடாதா என ஜீவா சொல்கிறார். மறுபக்கம் முல்லை மீனா ஐஸ்வர்யா பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தனம் முல்லைக்கு ஜூஸ் கொண்டு வருகிறார். அப்போது மீனா எங்களுக்கு ஜூஸ் இல்லையா என கேட்க தனம் உங்களுக்கு போடவில்லை இரு நான் போட்டு கொண்டு வருகிறேன் என சொல்கிறார். ஆனால் மீனா வேண்டாம் என சொல்ல, பின் ஐஸ்வர்யாவிடம் எப்படி கவனிக்கிறார்கள் என்று பாரு ஆனால் நான் மாசமாக இருக்கும் போது எனக்கு எதுவும் இல்லை என சொல்கிறார்.
மறுபக்கம் கடையில் கதிர் கணக்கு பார்க்க மூர்த்தி கம்ப்யூட்டரில் கணக்கு பார்க்கிறார். பின் மூர்த்தி சொல்வதற்குள் கதிர் சொல்கிறார். மூன்று பேரும் சந்தோசமாக பேசிக் கொண்டிருக்க, அப்போது ஒருவர் வருகிறார். அவரிடம் மூர்த்தி கடன் வாங்கி இருக்க கதிர் என்ன அண்ணா இது என கேட்கிறார். அப்போது மூர்த்தி அவசர தேவை என சொல்கிறார். எல்லாம் முல்லைக்காக தான என கதிர் கேட்க அதெல்லாம் இல்லை என சொல்கிறார். அவர் மோசமானவர் அவரிடம் ஏன் வாங்குனீங்க என கதிர் கேட்கிறார். நாளைக்கு முல்லை மருத்துவமனைக்கு போக வேண்டும் என சொல்கிறார். காசு எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என மூர்த்தி சொல்கிறார்.