பணத்தை சீக்கரம் ஏற்பாடு செய்ய சொல்லும் மூர்த்தி, முல்லையை நினைத்து வருத்தப்படும் கதிர் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி கதிர் ஜீவாவை அழைத்து முல்லைக்கு சீக்கிரமாக டிரீட்மென்ட் எடுக்க வேண்டும் என சொல்கிறார். ஜீவா மீனாவின் அப்பாவிடம் பணம் கேட்கலாமா என கேட்க மூர்த்தி வேண்டாம் என சொல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி அனைவரையும் அழைத்து முக்கியமான விஷயம் பேச வேண்டும் என சொல்கிறார். அப்போது மீனா அதிகமாக செலவாகும் என சொல்லிருக்காங்களே என கேட்க எப்படி தயார் செய்ய முடியும் என மீனா கேட்கிறார். பின் மூர்த்தி நானும் தனமும் பேசி முடிவு செய்துவிட்டோம் என சொல்கிறார். பின் கதிர் உடனே எப்படி முடியும் என கேட்க உடனே தான் செய்ய வேண்டும் என மூர்த்தி சொல்கிறார். பின் மூர்த்தி கடைக்கு கிளம்ப கதிரை இருந்துவிட்டு வர சொல்கிறார். ஜீவா நான் கடைக்கு வரவா என கேட்க, மீனா அப்பா உனக்கு வேலை சொன்னாரே என சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
அதனால் மூர்த்தி ஜீவாவை மீனாவின் அப்பா கடைக்கு போக சொல்கிறார். பின் ஐஸ்வர்யா நான் வருகிறேன் என கிளம்புகிறார். ஜீவா கதிரிடம் ஒன்றும் கவலைப்படாதே என சொல்கிறார். எல்லாரும் கிளம்ப மீனா கோவமாக பொம்மைகளை தூக்கி எறிகிறார். அப்போது கண்ணன் பணம் கிடைக்காமல் இருந்தால் எல்லாருடைய கிட்னியை எடுத்து விற்று பணம் வாங்கி அண்ணிக்கு டிரீட்மென்ட் பார்ப்பார்கள் என சொல்கிறார். பின் மீனா இவன் மிகவும் பயமுறுத்துகிறான் என நினைத்து பார்க்கிறார்.
மறுபக்கம் முல்லை தூங்கி கொண்டிருக்க கதிர் வருகிறார். அப்போது முல்லை ரொம்ப நேரம் தூங்கிவிட்டேன் போல என நினைக்க கதிர் முல்லையை கவனித்து கொள்கிறார். முல்லை நானே பார்த்துக் கொள்கிறேன் இப்போது கிளம்புங்கள் என சொல்கிறார். பின் கடையில் மூர்த்தி இருக்க ஜீவா வருகிறார். ஜீவாவிடம் ஜூஸ் குடிக்கிறியா என கேட்க நம்ம கடையில் இப்படி எல்லாம் கேட்காதீங்க என ஜீவா சொல்கிறார். பின் அக்கவுண்டில் பணம் எவ்வளவு இருக்கிறது என மூர்த்தி கேட்க 3 லட்சம் இருக்கும் ஆனால் அது வியாபாரத்திற்காக வைத்திருக்கிறோம் என சொல்கிறார்.
மூர்த்தி அதை எடுக்க சொல்ல ஆனால் அதை எடுத்தால் சிரமம் ஆகிவிடும் என ஜீவா சொல்கிறார். மீனாவின் அப்பாவிடம் பணம் கேட்கவா மாதம் மாதம் கொடுக்கலாம் என சொல்ல மூர்த்தி வேண்டாம் என சொல்கிறார். பின் ஐஸ்வர்யா முல்லைக்காக செயினை கழட்டி கொடுக்கிறார். பின் கதிர் முல்லையை பார்க்க வர முல்லையை நினைத்து வருத்தப்படுகிறார். பின் கதிர் பணம் நிறைய செலவாகும் என நினைத்துவருத்தப்படுகிறார். பணத்தை பற்றி கவலைப்படாதே என சொல்ல நீ முல்லையை பற்றி மட்டும் கவலைப்படு என சொல்கிறார். முல்லை வலியால் துடிக்க கதிர் நீ மட்டும் கஷ்டப்படாதே என்னையும் சேர்த்துக் கொள் என சொல்கிறார்.