ஒரேயொரு பாடலின் மூலம் மீண்டும் இணைந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் – வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் குடும்பத்தை விட்டு பிரிந்திருந்த கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பு எபிசோடில் இணைந்துள்ள வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு பெயர் போன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் எப்போதும் ஒற்றுமை, அன்பு, பாசம் மட்டுமே நிறைந்திருக்கும். இருந்தாலும் இடையிடையே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் தான் சீரியலில் அவ்வப்போது ஸ்வாரசியத்தை உண்டாக்கி வருகிறது. அந்த வகையில் எப்போதும் ஆனந்தம் கொண்டாடும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கடந்த சில வாரங்களாக பிரச்சனைகள் எழத்துவங்கியுள்ளது.
திருமணத்துக்கு தயாராகும் ‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி? வைரலாகும் புகைப்படம்!
என்றாலும் ஒவ்வொரு சிக்கலும் அந்த நாளின் இறுதியில் முடிவுக்கு வந்துவிடுவது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் ஸ்பெஷல் ஆகும். இந்நிலையில் தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பங்கள் ஒன்றிணைந்து இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி உள்ளனர். இது தொடர்பான ப்ரோமோக்கள் சில வலைதளங்களில் வெளியாகி பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் வருகையால் உருவாகும் அடுத்த பிரச்சனை – சீரியலில் அடுத்த ட்விஸ்டு!
அந்த வகையில் சூர்யவம்சம் திரைப்படத்தில் வருவதைப் போல ‘நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பார்க்குது’ என்ற பிரபல பாடலுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒன்றிணைந்து நடனமாடியுள்ளனர். குறிப்பாக இந்த நிகழ்வில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யாவும், கண்ணனும் குடும்பத்துடன் இணைந்துள்ளனர். இந்த கொண்டாட்ட நிகழ்வு இன்று தீபாவளி சிறப்பு கொண்டாட்டமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.