விஜய் டிவி ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் புதிய மஹாவாக நடிகை மோனிஷா – உறுதியான தகவல்!
சமீபத்தில் விஜய் டிவியின் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் இருந்து நடிகை ரக்ஷிதா விலகி இருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக நடிகை மோனிஷா இந்த சீரியலில் இணைந்துள்ளவாறு வெளியான புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை மோனிஷா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றான ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ தொடரில் இருந்து நடிகை ரக்ஷிதா தற்போது விலகி இருக்கிறார். கிட்டத்தட்ட 300 எபிசோடுகளுக்கும் மேல் ஒளிபரப்பாகி இருக்கும் இந்த சீரியலில் கதாநாயகியாக மஹா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ரக்ஷிதா. இந்த சீரியல் குழுவினருக்கும் நடிகை ரக்ஷிதாவுக்கும் இடையே மோதல் போக்கு உருவாகி இருந்ததாகவும் அதனால் தான் அவர் சீரியலை விட்டு விலகியதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.
ஒரேயொரு பாடலின் மூலம் மீண்டும் இணைந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் – வைரலாகும் வீடியோ!
என்றாலும் நடிகை ரக்ஷிதாவின் இந்த திடீர் விலகலுக்கு பிறகு ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் மஹாவாக யார் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. அதே நேரத்தில் இந்த சீரியலில் நடிக்க இருப்பதாகவும் சில முக்கியமான நடிகைகளின் பெயர்கள் அடிபட்டு வந்தது. இப்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் நடிகை மோனிஷா நடிக்க இருக்கும் தகவல் உறுதியாகி இருக்கிறது.
திருமணத்துக்கு தயாராகும் ‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி? வைரலாகும் புகைப்படம்!
நடிகை மோனிஷா விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அரண்மனை கிளி’ என்ற சீரியலில் ஜானு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த தொடர் முடிவடைந்ததும் விஜய் டிவியில் தலைகாட்டாமல் இருந்து வந்த நடிகை மோனிஷா தற்போது ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் மூலம் விஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.