“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லைக்கு குழந்தை பிறக்கும் அழகான தருணம் – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் சென்ற வாரம் வரை முல்லை கதிரை பற்றியே கதை சென்று கொண்டிருக்கிறது. டிரீட்மென்ட் பார்த்து கூட முல்லைக்கு குழந்தை இல்லை என குடும்பமே வருத்தப்படுகிறது. இந்நிலையில் இனி வரும் எபிசோடுகளில் முல்லைக்கு குழந்தை பிறக்க இருக்கும் அழகான தருணம் பற்றிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. நடுத்தரக் குடும்பத்தின் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் ஏகப்பட்ட ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். ஒரு குடும்பம் என்றால் அதில் இருக்கும் சந்தோஷங்களையும், வருத்தங்களையும் சார்ந்தே கதை இருக்கிறது. இந்நிலையில் சென்ற வாரம் கதிர் முல்லையை சுற்றியே கதை இருந்தது. முல்லைக்கு டிரீட்மென்ட் பார்க்க பல இடங்களில் கடன் வாங்கி மூர்த்தி ஏற்பாடு செய்ய ஆனால் அதுவும் நடக்காமல் போகிறது.
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ தொகுப்பாளர் ரக்ஷன் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
அதனால் முல்லை மனம் உடைந்து போகிறார். அடுத்து என்ன வழி என யாருக்கும் தெரியாமல் இருக்கிறது. குடும்பத்தினர் முல்லையை சமாதானம் செய்ய ரொம்ப கஷ்டப்படுகின்றனர். முல்லையின் மனதை மாற்ற வேண்டும் என சென்னைக்கு வருகின்றனர். தற்போது பாக்யலக்ஷ்மி குடும்பத்தில் தாத்தாவின் பிறந்தநாள் ஏற்பாடுகள் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இனி வரும் எபிசோடுகளில் முல்லைக்கு குழந்தை பிறக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
இனி முல்லை கடவுள் அருளால் கர்ப்பமாக இருக்க போகிறார். அவருடைய பிரசவம் நடந்து கையில் குழந்தையை வாங்கும் அழகான தருணங்களை பற்றிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனால் அது வெறும் எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ என்பதால் ரசிகர்கள் வருத்தமாக இருக்கின்றனர். முல்லையை குழந்தையுடன் பார்க்க மிகவும் அழகாக இருப்பதால் அந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த எபிசோடுகள் எப்போது வரும் என ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.