பரிகாரம் செய்யும் போது மயங்கி விழும் முல்லை, உறுதியாகும் கர்ப்பம் – மகிழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்!
குடும்பத்தினரின் பேச்சை கேட்காமல் முல்லை கோயிலில் பரிகாரம் செய்ய கிளம்புவது போலவும்,அதன்பிறகு யாரும் எதிர்பாராமல் முல்லை கர்ப்பமாவது போலவும் எபிசோடுகள் வர உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதை பார்க்க முடியாமல் அனைவரும் சேர்ந்து வீடு கட்டும் திட்டத்தை தற்போதைக்கு தள்ளி வைக்க நினைக்கின்றனர். அதற்க்கு பதிலாக முல்லைக்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக்கலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் மீனா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து இப்போ முல்லைக்காக நாம் அனைவரும் சரியான வீடு இல்லாமல் கஷ்டப்படணுமா என்று பேசிக் கொள்கின்றனர்.
இதனால் சிகிச்சை எடுத்துக் கொள்ள முல்லை மறுக்கிறார். அதற்கான பணம் தற்போது கையில் இல்லாததும் இதற்க்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இதனால் கஸ்தூரி சொல்லும் கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்யலாம் என்று முல்லை நினைக்கிறார். இதற்கு கதிர் மறுப்பு தெரிவிக்கிறார். ஆனால் முல்லை விடாபிடியாக இருந்து கோயிலுக்கு தனது மன அமைதிக்காக சென்று வர இருப்பதாக சொல்லுகிறார். இதன்பிறகு முல்லை கோயிலுக்கும் செல்கிறார்.
அங்கு பரிகாரம் செய்ய ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே முல்லை மயங்கி விழுகிறார். இதனால் கதிர் உட்பட குடும்பத்தினர் பயந்து கொண்டு அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு போய் சோதித்து பார்த்த பிறகு முல்லை கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது. இதனால் கதிர், முல்லை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பது போல் கதையில் மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.