ஜனார்த்தனன் வலையில் விழத்தொடங்கிய ஜீவா, சகோதரர்களுக்குள் வரும் விரிச்சல்? – பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் திருப்பங்கள்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீண்டும் ஒரு முறை ஜீவா குடித்து விட்டு வந்து வீட்டில் மூர்த்தியிடம் கோபப்படுவது போல் காட்சிகள் வர உள்ளது. இதனால் குடும்பத்தில் விரிசல் வர உள்ளது போல் மாற உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
மூர்த்தி ஜீவாவை ஒதுக்குவது போல் நடந்து கொள்வதாக ஜீவா நினைக்கிறார். மீனா அப்பா வீட்டில் கைலாஷ் ஜீவாவை குடிக்க வற்புறுத்துகிறார். இதனால் வேறு வழியில்லாமல் ஜீவா குடிக்கிறார். குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மூர்த்தியிடம், தன்னை ஒதுக்குவதாக கூறி கோவப்படுகிறார். அவரது மனதில் ஓடிய விஷயங்கள் அனைத்தும் வெளியே வந்து விடுகிறது. இதனால் மூர்த்தி, தனம் இருவரும் சங்கப்படுகின்றனர். மீனாவிடம் வந்து நீ தான் எல்லாம் என்று சொல்லி புலம்புகிறார்.
சர்மிளா தான் வெண்பாவின் அம்மாவா? கதையில் புது குழப்பம்? – பாரதி கண்ணம்மா சீரியல் டிவிஸ்ட்!
இதை மீனாவும் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார். அப்படியே ஜீவாவை அப்பா வீட்டிற்கே அழைத்து சென்று விடலாம் என்று பிளான் போடுகிறார். ஜனார்தனனும் இது தான் நல்ல வாய்ப்பு என்று நினைக்கிறார். இன்னொரு புறம் கண்ணன் வந்து ஜீவா அண்ணன் மூர்த்தி அண்ணனை எதிர்த்து பேசிய விஷயத்தை பெரிய சாகசமாக பேசுகிறார். இனி என்ன தான் எடுத்து சொன்னாலும் ஜீவா மூர்த்தியை புரிந்து கொள்ள மாட்டார் என்று தெரிய வருகிறது.
இந்த சண்டை மிகவும் பெரிய அளவில் வளருகிறது. நம்ம இல்லாமல் இங்கே அனைத்து வேலைகளும் ஒழுங்காக நாடாகும் என்றால் அப்போ நாம் இவ்வளவு வருஷமாக இங்கே எதற்காக உழைக்கணும் என்று கேள்வி வருகிறது. இப்படியே சென்று சிறிது நாட்கள் கழித்து மீண்டும் இவர்கள் ஒன்று சேருவார்கள் என்று கதை நகரும் என்று தெரிகிறது. இந்த பாசமாக குடும்பத்தில் விரிசல் வருவதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.