சர்மிளா தான் வெண்பாவின் அம்மாவா? கதையில் புது குழப்பம்? – பாரதி கண்ணம்மா சீரியல் டிவிஸ்ட்!
பாரதி கண்ணம்மா சீரியலில் புதிதாக வந்த சர்மிளா கதாபாத்திரம் புதிய சிக்கலை கொண்டு வந்திருக்கிறார். இதனால் கோவமான பாரதி என்ன முடிவெடுக்க உள்ளார் என்பது இனி வரும் நாட்களில் தெரிய வர இருக்கிறது.
பாரதி கண்ணம்மா:
கனமவை எப்படியாவது பிரிந்து விட வேண்டும் என்று பாரதி எந்த காரியத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கிறார். ஆனால் லட்சுமி அப்பா என்று கூப்பிட்ட போதும் கூட ஒன்றும் சொல்லாமல் இருக்கிறார்.மேலும், லக்ஷ்மிக்கு எதாவது நடந்தால் தனக்கு ஏன் இந்த அளவிற்கு பாதிக்கிறது என்று யோசிக்க தொடங்கி விட்டார். ஹேமா ஒரு புறம் பாரதி மற்றும் கண்ணம்மாவிற்கு கல்யாணம் செய்து வைக்க ஆர்வமாக இருக்கிறார். இதனால் கண்ணம்மா மிகவும் குழப்பமான சூழலில் சிக்கி தவித்து வருகிறார்.
இன்னொரு புறம் பாரதியை வந்து சந்திக்கும் புதிய கதாபாத்திரமான சர்மிளா பாரதியின் கல்யாணம் பற்றியும், விவாகரத்து பற்றியும் பேசுகிறார். இதனால் கோவமான பாரதி யார் என்று கேட்கிறார். அவர் வெண்பாவை கை காட்ட, பாரதி வெண்பாவிடம் வந்து யார் அவங்க, எதுக்கு உனக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வைக்க போறதா சொல்றாங்க என்று கோவப்படுகிறார். அதற்கு வெண்பா, அது தனது அம்மா தான் என்று கூறுகிறார்.
வெண்பாவின் அம்மா போன வருஷமே என்ன சொன்ன, கண்டிப்பா சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்க போறதா தான சொன்ன, நீ பண்ணிக்கல அதனால தான் உனக்கும் பாரதிக்கும் கல்யாணம் பண்ணி வைக்க நான் வந்துருக்கேன் என்று சொல்கிறார். நீ பாரதி உன்ன காதலிக்குறதா தான சொன்ன, ஆனால் அப்படி இல்லை போலவே என்று கேட்கிறார். இதனால் வெண்பா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழிக்கிறார்.