ராதிகாவிடம் பேசும் போது கேட்டு விடும் பாக்கியா, அதிர்ச்சியில் கோபி – பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்!
பாக்கியலட்சுமி சீரியலில் கதை மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதனால் ரசிகர்களுக்கும் மிகவும் தீவிரமாக சீரியலை விரும்பி பார்த்து வருகின்றனர். இன்றைய எபிசோடில் வர உள்ள காட்சிகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா இன்று தான் கோபியிடம் ஆஸ்ரமத்திற்கு சாப்பாடு கொடுக்க இருப்பதை பற்றி பேசுகிறார். அம்மா சொன்னதால் தான் இந்த ஏற்பாட்டை செய்திருப்பதாகவும் கூறுகிறார். அதற்கு ஆஸ்ரமத்தையும் பார்த்து விட்டதாகவும் கூறுகிறார். இனி சாப்பாடு மட்டும் நாம கொண்டு போனா போதும், அதற்கும் டீச்சரிடம் சொல்லி ஏற்பாடு செய்து விட்டதாக கூறுகிறார். டீச்சர் பெயரை கேட்டதும், கோபி கோவப்படுகிறார். எப்போ பாத்தாலும் டீச்சர், டீச்சர் ன்னு சொல்லிகிட்டே இருப்பதாக கோவப்படுகிறார்.
‘பாக்கியலட்சுமி’ சீரியல் அம்ரிதாவுக்கு திருமணமா? ஷாக்கான ரசிகர்கள்!
இதனால் ராதிகா மற்ற யாரை பற்றி பேசினாலும் அமைதியா இருக்கீங்க, ஆனா டீச்சரை பற்றி பேசினால் மட்டும் ஏன் கோவப்படுறீங்க என்று கேட்கிறார். இதனால் கோபி எதற்கு வேம்பு என்று வாயை மூடிக் கொள்கிறார். இன்னொரு புறம் எழிலின் தோழியாக ஒருவர் அறிமுகம் ஆகிறார். அவர் உதவி இயக்குனராக சேர்ந்து கொள்வதாக கூறுகிறார். எழிலும் அவரை சேர்த்துக் கொள்கிறார். அந்த பெண்ணை அம்ரிதாவிற்கு எழில் அறிமுகம் செய்து வைக்கிறார்.
தனது முதல் படத்திற்கு மிகவும் உதவியாக இருந்தவர் என்றும் கூறுகிறார். பாக்கியாவின் வீட்டில் இரவு தூங்குவதற்க்கு பாக்கியா கோபியின் ரூமிற்க்கு வருகிறார். பாக்கியா வந்து கதவை மூடவும் கோபி பதறுகிறார். ஏன் இந்த வர்ற என்று கேட்கிறார். அதற்கு பாக்கியா அத்தை தான என்ன இங்க தூங்க சொன்னாங்க என்று சொல்லுகிறார். வேறு வழியில்லாமல் கோபி அமைதியாக இருக்கிறார். பழக்க தோஷத்தில் காலை எழுத்து ராதிகாவிற்கு குட் மார்னிங் ராதிகா என்று சொல்லி விட்டு பார்த்தால் பாக்கியா பின்னால் நிற்கிறார். இதனால் கோபி அதிர்ச்சி அடைகிறார்.