முல்லைக்கு வளைகாப்பு நடத்தும் குடும்பத்தினர் – விறுவிறுப்பான எபிசோடுகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் சக்தி இல்லை என கூறப்பட்ட நிலையில், தற்போது முல்லை கர்ப்பமாக இருப்பது போன்றும், முல்லைக்கு வளைகாப்பு நடத்துவது போன்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் கூட்டு குடும்பத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் அப்படியே படம் போட்டு காட்டி கொண்டிருக்கிறது. இதனால் இந்த சீரியலுக்கு மக்களின் மத்தியில் அதிகப்படியான ஆதரவு இருந்து வருகிறது. அந்த சீரியலில் மூத்த அண்ணனின் மனைவியான தனத்திற்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்து பலரின் ஏச்சு பேச்சுக்களை வாங்கி கொண்டிருந்தார்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மாற்றப்பட்ட முல்லை கதாபாத்திரம் – ப்ரோமோ ரிலீஸ்!
அதற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து தற்போது தான் தனம் குழந்தை பெற்றுள்ளார். ஜீவாவின் மனைவியான மீனாவுக்கும் சில மாதங்களுக்கு முன்பாகவே குழந்தை பிறந்தது. அந்த வீட்டிலேயே முல்லை மட்டும் தான் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறார். ஆனால் முல்லை தற்போது தான் கதிரை காதலிக்க துவங்கியுள்ளார். விரைவில் முல்லையும் குழந்தையை பெற்றெடுப்பார் என எதிர்பார்த்த சமயத்தில் முல்லையால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என மருத்துவர் கதிரிடம் கூறியுள்ளார்.
தன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்கிற விஷயத்தை முல்லை அறிந்து கொண்டால் அவளால் தாங்கிக்கொள்ள முடியாது என கதிர் அந்த விஷயத்தை யாரிடமும் கூறாமல் மூடி மறைகிறார். ஆனால் தற்போது முல்லை கர்ப்பமாக இருப்பது போன்றும், முல்லைக்கு குடும்பத்தினர் வளைகாப்பு நடத்துவது போன்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் மக்கள் உண்மையாகவே முல்லை கர்ப்பமாக இருக்கிறாரா எது உண்மை என குழம்பி வருகின்றனர்.