நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மூர்த்தி, பார்க்க வரும் கதிர் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த திருப்பம்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிரும் முல்லையும் கடனால் வந்த பிரச்சனையால் குடும்பத்தை விட்டு வெளியே செல்கின்றனர். அதனால் மூர்த்தி வருத்தத்தில் இருக்க அவருக்கு நெஞ்சு வலி வருகிறது. அதனால் அவரை பார்க்க கதிர் வருகிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்பத்தில் முல்லைக்கு வாங்கிய கடனால் பெரிய பிரச்சனை வருகிறது. மீனாவின் அப்பா கதிர் பற்றி பேச அதனால் முல்லை அம்மா பேச, அவர் தனத்தை குறை சொன்னதை தாங்க முடியாமல் தனத்தின் அம்மாவும் பதிலுக்கு பேசுகிறார். அதனால் குடும்பத்தில் பிரச்சனை வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் கதிரால் அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்க முடியாமல் இருக்கிறது. அதனால் மனம் உடைந்த கதிர் வீட்டை விட்டு வெளியே போக முடிவு செய்கிறார்.
பாரதிக்கு முன் வெண்பாவை வச்சு செய்த கண்ணம்மா- ப்ரோமோ ரிலீஸ்! அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
மூர்த்தி கதிரை தடுக்க ஆனால் கதிர் பிடிவதாக இருக்கிறார். தனம் போகாதே என சொல்ல, ஆனால் கதிர் முல்லை கிளம்ப முடிவு செய்கின்றனர். நீ இந்த வீட்டை விட்டு சென்றுவிட்டால் நான் உன்னுடன் பேசமாட்டேன். இந்த வீட்டிற்கு இனிமேல் நீ வரவே கூடாது என மூர்த்தி சொல்லியும் கூட கேட்காமல் கதிர் கிளம்புகிறார். அதனால் மூர்த்தி மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார். கதிர் இப்படி பேசியதை தாங்க முடியாமல் குடும்பத்தில் அனைவரும் சோகத்தில் இருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
கண்ணன் கதிரை தேடி செல்ல அப்போதும் கதிர் வரவே மாட்டேன் என பிடிவாதமாக இருக்கிறார். எங்களுக்காக வாங்கிய கடன் அனைத்தையும் கொடுத்துவிட்டு தான் நான் வீட்டிற்கு வருவேன் என கதிர் உறுதியாக இருக்கிறார். கண்ணன் போன வருத்தத்தில் மூர்த்திக்கு முடியாமல் போன நிலையில் தற்போது கதிர் சென்று இருப்பதால் மூர்த்திக்கு நெஞ்சுவலி வருகிறது. அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட கதிர் மூர்த்தியை பார்க்க வருகிறார். அண்ணன் கண்ணை திறந்து பாருங்கள் என சொல்ல மூர்த்திகாக கதிர் வீட்டிற்கு வருவாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.