குழந்தை வரம் வேண்டி பரிகாரம் செய்யும் முல்லை – கோவத்தில் கதிர்! சீரியலில் அடுத்த திருப்பம்!

0
குழந்தை வரம் வேண்டி பரிகாரம் செய்யும் முல்லை - கோவத்தில் கதிர்! சீரியலில் அடுத்த திருப்பம்!
குழந்தை வரம் வேண்டி பரிகாரம் செய்யும் முல்லை - கோவத்தில் கதிர்! சீரியலில் அடுத்த திருப்பம்!
குழந்தை வரம் வேண்டி பரிகாரம் செய்யும் முல்லை – கோவத்தில் கதிர்! சீரியலில் அடுத்த திருப்பம்!

செயற்கை முறையில் சிகிச்சை எடுக்க யாருமே முன்வராத காரணத்தினால் முல்லை, கோவிலில் பரிகாரம் செய்தாவது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்து யாருக்கும் தெரியாமல் பரிகாரம் செய்கிறார். பின்பு கதிர் அதனை அறிந்து முல்லையிடம் சண்டையிடுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. முல்லைக்கு குழந்தை பிறக்குமா, செயற்கை முறையில் சிகிச்சை எடுத்து கொள்வார்களா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். அதாவது முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என மருத்துவர் கூறிவிடுகிறார். முல்லைக்கு குழந்தை பிறக்காது என்கிற விஷயம் முல்லைக்கு தெரிந்தால் முல்லையால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதால் முல்லைக்கு தெரியாமல் இந்த விஷயத்தை மறைத்துவிடுகிறார்.

தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தை கலாய்த்த பிரபல சேனல் – சர்ச்சையாகும் வீடியோ! கோவத்தில் ரசிகர்கள்!

பின்னர் முல்லையே கதிர் மறைத்து வைத்திருந்த ரிபோர்ட்டை பார்த்து உண்மையை தெரிந்து கொள்கிறார். தன்னால் ஒரு குழந்தையை கூட பெற்றுக்கொடுக்க முடியவில்லை என நினைத்து அவமானத்தில் வீட்டை விட்டு கிளம்புகிறார். இதற்கு பிறகு கதிர் முல்லையை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வருகிறார். செயற்கை முறையில் வேண்டுமானால் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என மருத்துவர் கூறியதால் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை சிகிச்சை எடுத்து கொள்ளலாம் என குடும்பத்தினர்கள் கூறிவிடுகிறார்கள். சிகிச்சைக்கு நிறைய செலவாகும் என்பதால் தற்போதைக்கு வீடு கட்டும் பிளானை நிறுத்தி வைக்கலாம் என மூர்த்தி கூறுகிறார்.

ஆனால், அனைவருக்கும் சொந்தமான வீட்டை எப்படி விட்டு கொடுக்க முடியும் என மீனா சண்டை போடுகிறார். எப்படியும் இவர்கள் சிகிச்சை எடுக்கமாட்டார்கள் என நினைக்கிறார். இதற்கு இடையே ஒருவர் கோவிலுக்கு பரிகாரம் செய்தால் குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கிறது என கூறுகிறார். ஆனால், வீட்டில் உள்ள யாருமே பரிகாரம் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை. உடனே வீட்டில் உள்ள யாரிடமும் கூறாமல் தனியாக கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்கிறார். கோவிலில் முல்லை பரிகாரம் செய்துகொண்டிருப்பது கதிருக்கு எப்படியோ தெரிந்துவிடுகிறது. உடனே கோவிலுக்கு வந்து முல்லையிடம் சண்டையிடுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!