தனத்திடம் கோபிக்கும் மீனா, செய்த தவறுக்காக வருத்தப்படும் ஜீவா – இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோடு!

0
தனத்திடம் கோபிக்கும் மீனா, செய்த தவறுக்காக வருத்தப்படும் ஜீவா - இன்றைய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' எபிசோடு!
தனத்திடம் கோபிக்கும் மீனா, செய்த தவறுக்காக வருத்தப்படும் ஜீவா - இன்றைய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' எபிசோடு!
தனத்திடம் கோபிக்கும் மீனா, செய்த தவறுக்காக வருத்தப்படும் ஜீவா – இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோடு!

ஜீவா சரக்கு அடித்ததால் வீட்டில் பெரிய பிரச்சனை உருவாக மூர்த்தி மற்றும் தனம் இருவரும் அவர் மீது கோபப்படுகின்றனர். மறுபக்கத்தில் ஜீவாவை எல்லாருக்கும் முன் வைத்து திட்டியது சரி இல்லை என்று மீனா, தனம் மீது கோபப்படுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஜீவா சரக்கு அடித்து விட்டு வந்து தனது மனக்குமுறலை மூர்த்தியிடம் கொட்டித் தீர்க்கிறார். இதனை தொடர்ந்து மறுநாள் காலையில் நீ ஏன் இப்படி சரக்கு அடித்து விட்டு வந்து மாமாவிடம் பேசுகிறாய். இது என்ன புது பழக்கம். இது சரி இல்லை ஜீவா என தனம் பேச இது ஒரு ஜாலிக்கு தானே என்று ஜீவா பதில் கூறுகிறார். இதை கேட்டு கோபப்படும் மூர்த்தி, சரக்கு அடிப்பது சரி என்றால் இனி நாம் எல்லாரும் சேர்ந்து தண்ணி அடிப்போம். இதுக்கு ஒதுக்கிரியா என்று கேட்க, சாரி அண்ணன் என்று பதில் சொல்லி விட்டு தலை குனிந்து நிற்கிறார் ஜீவா.

நடிகை ஷபானா நடிக்கும் புதிய சீரியல் ‘செல்லமா’ ப்ரோமோ ரிலீஸ் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

பிறகு, கதிரிடம் பேசிக்கொண்டிருக்கும் ஜீவா நான் குடித்ததற்கு இது தான் காரணம் என்று நேத்து சொல்லி இருந்தேன். நான் கடைக்கு வந்தால் என்னை யாரும் கண்டுகொள்வதில்லை. நான் வந்தாலே எனக்கு வேலை இல்லை என்று விரட்டுகிறீர்கள் என வருத்தப்படுகிறார் ஜீவா. தொடர்ந்து, நீ அண்ணனை தவறாக நினைத்து விட்டாய். உன் மாமா வந்து சொன்னதால் தான் அண்ணன் உன்னை அங்கு அனுப்பி வைத்தார். உன்னை அனுப்பி விட்டு அவர் வருத்தப்பட்டார் என விளக்கம் சொல்கிறார் கதிர். பிறகு மூர்த்தியை நினைத்து சந்தோஷப்படுகிறார் ஜீவா. மறுபக்கத்தில் வீட்டில் வைத்து முல்லையும், மீனாவும் பேசிக்கொண்டிருக்க ஜீவா வருத்தத்தில் குடித்து விட்டான் என்று கூறுகிறார் மீனா.

அப்போது அங்கு வரும் தனம், அப்போ அவன் தண்ணி அடித்தது சரியா என கூற, அவனுக்கு தண்ணி அடித்தால் தான் உங்களிடம் பேச தைரியம் வரும் என அப்படி செய்தான். அதற்காக எல்லார் முன்னாடி வைத்தும் நீங்கள் அவனை திட்டாதீர்கள். அவன் டெய்லி குடித்து விட்டு வர மாட்டான். எப்போதாவது தான் இப்படி செய்கிறான் என பதில் கூறுகிறார் மீனா. தொடர்ந்து அவன் தண்ணி அடிப்பது சரியில்லை. அவனுக்கு நீ சப்போர்ட் செய்யாத. அவனை யாராவது திட்டினால் நீ எதுவும் சொல்லாத. அவனிடம் சொல்லி வை என கண்டிப்புடன் கூறி விட்டு கிளம்புகிறார் தனம். தொடர்ந்து, ஜீவா செய்ததை நினைத்து மூர்த்தி வருத்தப்பட்டு கொண்டிருக்க, நாம தான் கடைக்கு வர வேண்டாம் என்று அண்ணனிடம் சொன்னோம்.

அந்த வருத்தத்தில் அண்ணன் ஏதோ தெரியாமல் செய்து விட்டார். நான் அண்ணனிடம் பேசுகிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள் என்று கதிர் பேச அவன் யாருடன் சேர்ந்து இந்த விஷயத்தை செய்கிறான் என மூர்த்தி கேட்கிறார். அப்போது, கைலாஷுடன் சேர்ந்து தான் ஜீவா தண்ணி அடித்ததாக கதிர் சொல்ல அவரை கையோடு கூட்டி வர சொல்கிறார் மூர்த்தி. தொடர்ந்து கைலாசுக்கு விருந்து இருப்பதாக சொல்லி கதிர் அழைத்து கொண்டு வர, அவர் மூர்த்தியிடம் சென்று விருந்து இருக்குனு சொன்னீங்கலாமே மூர்த்தி மாம்ஸ். சரக்கு அடிப்போமா என ஜாலியாக பேச மூர்த்தி அவரை முறைத்தபடி இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!