மூர்த்தியை எதிர்த்து கண்ணனை வீட்டிற்குள் அழைத்து வரும் தனம், அதிர்ச்சியில் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
மூர்த்தியை எதிர்த்து கண்ணனை வீட்டிற்குள் அழைத்து வரும் தனம், அதிர்ச்சியில் குடும்பத்தினர் - இன்றைய
மூர்த்தியை எதிர்த்து கண்ணனை வீட்டிற்குள் அழைத்து வரும் தனம், அதிர்ச்சியில் குடும்பத்தினர் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
மூர்த்தியை எதிர்த்து கண்ணனை வீட்டிற்குள் அழைத்து வரும் தனம், அதிர்ச்சியில் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் கண்ணன் இடத்தில் வேற யாரவது இருந்தால் நீங்க இப்படி செய்திருக்கமாடீங்க என சொல்கிறார். மூர்த்தி அதற்கு ஒன்றும் சொல்லாமல் இருந்ததால் தனம் கண்ணனை வீட்டிற்கு அழைத்து வர முடிவு செய்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் மூர்த்தியிடம் கண்ணனிற்கு நீங்க செய்வது ரொம்ப தவறு நீங்க ரோட்டில் சென்றிருக்கும் ஒருவருக்கு இப்படி நடந்த நீங்க இது போல வெளியே போயிருக்க சொல்லமாட்டீங்க. கண்ணனை யாரு வேண்டுமென்றாலும் அடிக்கலாம் அவனை கேட்க ஆள் இல்லை அதனால் தான். எல்லாரும் அடிக்கிறாங்க. அவனை பொத்தி பொத்தி வளர்த்து இப்படி விட்டுட்டோம் என சொல்கிறார். அத்தை இருந்திருந்தால் இப்படி செய்யமாட்டாங்க என சொல்கிறார். அப்போது மூர்த்தி ஒன்றும் பேசாமல் தூங்க செல்கிறார்.

அதை பார்த்து தனம் அதிர்ச்சி அடைகிறார். கண்ணன் தூங்காமல் அண்ணன் பேசியதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க, ஐஸ்வர்யா என்ன தான் கோவம் இருந்தாலும் இந்த நேரத்தில் இப்படி செய்திருக்க கூடாது என சொல்கிறார். அண்ணன் என் மீது எவ்வளவு பாசமாக இருக்கும் தெரியுமா ஆனால் இப்படி வெறுக்கும் அளவிற்கு நான் செய்துவிட்டேன் என வருத்தப்படுகிறார். வீட்டிற்குள் நாம காலை முதல் இருந்தோம் யாரும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் உங்க அண்ணா வந்ததும் நாம உள்ளே போயிருக்கலாம் நீ தான் ரோசப்பட்டு வெளியே வந்த என சொல்கிறார்.

குழந்தைத்தனமாக கண்ணம்மாவிடம் சண்டையிடம் பாரதி, சாப்பாடு கொண்டு வரும் சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

இல்லை ஐசு அண்ணன் என்னை பார்த்ததே இன்னும் நீ போகலையா என்பது போல தன இருந்தது என சொல்கிறார். இன்னைக்கு உன் மற்ற அண்ணன்கள் அண்ணி எல்லாரும் பாசமாக பேசியதே சந்தோசமாக இருந்தது என ஐசு சொல்ல, கண்ணன் மூர்த்தி பேசியதை நினைத்து வருத்தப்படுகிறார். மறுநாள் கதிர் கயலை பற்றி பேசிக் கொண்டிருக்க, மீனா அவள் செய்யும் சேட்டைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது ஜீவா வர கண்ணன் இன்னும் எந்திரிக்கவில்லை என சொல்கிறார். அப்படியே போய் அவன் வீட்டிற்குள் பார்க்க வேண்டியது தான என கேட்கிறார்.

அந்த நேரம் மூர்த்தி வர மீனா பேச்சை மாற்றுகிறார். தனம் வந்து கோவமாக நிற்க இரவெல்லாம் தூங்கலையா என ஜீவா கேட்கிறார். எனக்கு தூக்கம் வரவில்லை என சொம்மா தனம், வெளியே சென்று கண்ணனை பார்க்கிறார். ஆனால் கண்ணனை காணாமல் இருக்க, உள்ளே வந்த தனம் உங்க பேச்சை மீறி இதுவரை நான் நடந்ததில்லை. ஆனால் இப்போது உங்களிடம் கேட்காமல் ஒரு முடிவை எடுக்க போகிறேன் என சொல்லி தனம் கண்ணன் வீட்டிற்கு செல்கிறார். அங்கே கண்ணனை கூப்பிட, உள்ளே வந்த தனம் கண்ணனிற்கு எப்படி இருக்கிறது என கேட்கிறார்.

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் டிச.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் உத்தரவு!

பரவாயில்லை என சொல்ல, நீங்க எப்படி இங்கே வந்தீங்க மாமா ஒன்றும் சொல்லவில்லையா என கேட்கிறார். மீனா என்ன நடக்கிறது என தெரியாமல் இருக்க, போலாம் வா என தனம் கூப்பிடுகிறார். ஐஸ்வர்யாவை கண்ணன் பார்க்க நீயும் தான் இரண்டு பேரும் நம்ம வீட்டிற்கு போவோம் என சொல்கிறார். கண்ணன் என்ன சொல்வது என புரியாமல் இருக்கிறார். மாமா கடைக்கு போய்ட்டாங்களா என ஐஸ்வர்யா கேட்க, நீங்க தனியாக இருந்தது போதும் உங்களுக்கு யாரும் இல்லையா என கேட்டு கண்ணன் கையை பிடித்து தனம் கூட்டி வருகிறார். அனைவரும் அதை பார்த்து அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

மீனா உள்ளே சென்று ஜீவா விடம் சொல்ல, என்ன நடந்தது என ஜீவா கேட்கிறார். தனம் வா உள்ளே என கையை பிடித்து கூட்டி செல்கிறார். குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் இருக்க, கண்ணன் இனிமேல் இங்கே தான் இருப்பான் இன்னைக்கு மட்டும் இல்ல இனிமேல் இங்கே தான் இருப்பான் என சொல்கிறார். இந்த முடிவை நீங்க எடுப்பீங்க என நினைத்தேன் ஆனால் நீங்க எடுக்காததால் நான் எடுத்தேன் என சொல்கிறார். அத்தை இறப்பதற்கு முதல் நாள் என்னிடம் பேசினார்கள்.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் முடியப் போகிறதா? ரிஷி, ரூபஸ்ரீ சொன்ன தகவல்!

நான் அத்தை சொன்னதை தான் செய்திருக்கேன் என தனம் சொல்கிறார். மூர்த்தி உடனே கோவப்பட்டு எழுந்து செல்கிறார். கண்ணன் வேண்டாம் அண்ணி என சொல்ல, கதிர் ஜீவாவிடம் உங்களுக்கு இவன் இருப்பதால் எதாவது பிரச்சனை இருக்கிறதா என கேட்கிறார்.வெளியே சென்ற மூர்த்தி கோவமாக வண்டியை ஸ்டார்ட் செய்கிறார். மீனா மாமா வெளியே போய்ட்டாங்க நீ தைரியமாக சொல்லு என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!