விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் முடியப் போகிறதா? ரிஷி, ரூபஸ்ரீ சொன்ன தகவல்!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியல் முடியப் போகிறதா? ரிஷி, ரூபஸ்ரீ சொன்ன தகவல்!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியல் முடியப் போகிறதா? ரிஷி, ரூபஸ்ரீ சொன்ன தகவல்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் முடியப் போகிறதா? ரிஷி, ரூபஸ்ரீ சொன்ன தகவல்!

பாரதி கண்ணம்மா தொடரில் சௌந்தர்யாவாக பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வரும் ரூபஸ்ரீ மற்றும், வேணுவாக நடித்து வரும் ரிஷி இருவரும் பல வருட நண்பர்களாக உள்ள நிலையில், இவர்கள் சேர்ந்து அளித்துள்ள பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலின் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தற்போது மிகவும் விறுவிறுப்பாக கதையின் போக்கு உள்ளது. பாரதி கண்ணம்மா தொடரின் கதை திருப்பங்கள் தான் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. புதிய கண்ணம்மாவை அறிமுகப்படுத்தும் காட்சிகளில் ரசிகர்களுக்கு மாற்றத்தை விட திருப்பமே முக்கியமாக இருக்க வேண்டும் என்ற வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டது. பழைய கண்ணம்மாவின் நடிப்பை ரசிகர்கள் மிஸ் செய்து வருகிறார்கள் என்ற போதிலும், அதை மறக்கும் அளவிற்கு கத்தியின் திருப்பம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் 3 மணி நேர ஸ்பெஷல் எபிசோட் – ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

இந்த சீரியலில் பாரதியின் அப்பா மற்றும் அம்மாவாக நடித்து யாரும் ரூபஸ்ரீ மற்றும் ரிஷி இருவரும் மிகவும் பாந்தமான நடிப்பை தொடரில் வெளிப்படுத்தி இருப்பார்கள். சௌந்தர்யா எப்போதும் படபடப்பாக இருப்பது போலும், வேணு மிகவும் அமைதியாக முடிவெடுக்க கூடியவராகவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இதனால் இந்த இருவரின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்படும். பாரதியை மாற்றுவதற்கு இவர்கள் இருவரும் மிகவும் போராடி வருவார்கள்.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் 3 மணி நேர ஸ்பெஷல் எபிசோட் – ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

இவர்கள் இருவரும் சேர்ந்து தனியார் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தாங்கள் இருவரும் 2000 ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 21 வருட நண்பர்கள் என்றும், எப்போதும் இருவரும் பாசத்துடன் பேசிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கிண்டல் செய்து கொள்ளும் பழக்கமுடையவர்களாக உள்ளனர். இந்த பேட்டியில், ரூபஸ்ரீ பாரதி கண்ணம்மா தொடர் பற்றி தனது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் கதை கேட்பதாகவும், இப்போது மிகவும் பரபரப்பாக போய்க் கொண்டிருப்பதால் சீரியல் முடியாகிறதா என்றும் கேள்விகளை கேட்டு வருகிறார்கள் என்று கூறியிருந்தார். ஆனால் நடப்பதை சீரியலை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று தான் கூறி விடுவேன் என்றும் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!