தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் டிச.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் உத்தரவு!
தமிழகத்தில் இறுதியாக டிசம்பர் 15ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பரவி வரும் கொரோனா வைரஸின் மாறுபாடு ஓமைக்ரான் அச்சுறுத்தல் மற்றும் பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் அதிகம் கூடுவதை தவிர்க்கவும் தற்போது ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகளுடன் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பரவல் கடந்த மார்ச் மாதத்தில் பரவ தொடங்கியது. நோய் தொற்று அதிக வேகத்தில் பரவி ஏப்ரல் மாத இறுதியில் தமிழ்கத்தில் கொரோனா பரவல் அலை தீவிரமடைந்தது. இதனால் முதல் முறையாக கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதால் அசட்டையாக இருந்த காரணத்தால் அடுத்த கட்டமாக தீவிர கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதன்பின்னர், தீவிர கட்டுப்பாடுகளின் விளைவினால் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. இதனால் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது.
TNPSC குரூப் 4 பாட ஆன்லைன் வகுப்புகள் – தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு
இறுதியாக டிசம்பர் 15ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு அறிவிப்பின் இறுதி நாட்கள் வந்துள்ளதாலும், தற்போது பண்டிகை காலமாக உள்ளதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மற்றும் அண்டை மாநிலங்களில் பரவி வரும் கொரோனா தொற்றின் உருமாறிய ஓமைக்ரான் பரவல் தொடர்ந்து அச்சறுத்தலை ஏற்படுத்தி வருவதாலும், தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
டிகிரி முடித்தவரா ? – HCL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு 2021
ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் டிசம்பர் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் பண்டிகை காலத்தில் மக்கள் அதிக அளவில் கூட்டம் கூட வாய்ப்புகள் உள்ளதால் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மக்களின் நலன் கருதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அறிவிப்பில், செயல்பாடுகள் அனைத்தும் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும். மேலும், சில நடவடிக்கைகள் நிலையான வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்:
- அனைத்து நீச்சல் குளங்களும் செயல்படலாம்.
- கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக டிசம்பர் 31ம் தேதி மற்றும் ஜனவரி 1ம் தேதியும் அனைத்து கடற்கரைகளிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.
- மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜனவரி 3ம் தேதி முதல் தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள், அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறை இன்றி வழக்கமாக செயல்படும்.
- கடைகள் இயங்குவதற்கு அரசு முன்னதாக அறிவித்துள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் கண்டிப்பாக கடைபிடிக்கப்படும்.
- கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெறும்.
- நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- தீவிர நோய் பரவல் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களில் வீடு வீடாக சென்று சோதனை நடத்தப்படும்.
- கொரோனா நோய் தடுப்பு தொற்று கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு , விதி மீறல் செயல்களில் ஈடுபடுவோர் மீது அபாரதங்கள் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும், அண்டை மாநிலங்களில் அதிக அளவில் ஓமைக்ரான் பரவல் பரவி வருவதால் பொதுமக்கள் அனைத்து பொது இடங்களிலும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க கெடுக்க கொள்ளப்பட்டுள்ளது.