கண்ணன், ஐஸ்வர்யாவிற்கு தங்களது ரூமை கொடுத்த தனம் & மூர்த்தி – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோட்!

0
கண்ணன், ஐஸ்வர்யாவிற்கு தங்களது ரூமை கொடுத்த தனம் & மூர்த்தி - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' அடுத்த எபிசோட்!
கண்ணன், ஐஸ்வர்யாவிற்கு தங்களது ரூமை கொடுத்த தனம் & மூர்த்தி - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' அடுத்த எபிசோட்!
கண்ணன், ஐஸ்வர்யாவிற்கு தங்களது ரூமை கொடுத்த தனம் & மூர்த்தி – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோட்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்தடுத்து பல திருப்பங்களும் நடந்து சுவாரஸ்யத்தை அதிகரித்து வரும் நிலையில் தற்போது குடும்பத்தினர் சங்கடத்தில் இருப்பது போல் காட்சிகள் வரும் வாரத்தில் நடக்க இருக்கிறது.

புதுமண தம்பதிகள்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய திருப்பமாக அமைந்தது யாரும் எதிர்பார்க்காத வகையில், கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டது தான். இதனால் இவர்களை மூர்த்தி குடுமபத்தை விட்டு தள்ளி வைத்திருந்தார். ஆனால் கண்ணனும், ஐஸ்வர்யாவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டின் எதிரிலேயே ஒரு வீட்டிற்கு குடி வருகின்றனர். தனியாக இருக்கும் கண்ணனும், ஐஸ்வர்யாவும் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி கொண்டு இருந்தனர். இதனை பார்த்துக் கொண்டிருந்த தனம் இனி கண்ணனும், ஐஸ்வர்யாவும் நம்ம கூட தான் இருப்பார்கள் என்று வீட்டிற்கு கூட்டி வந்து விடுகிறார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய ரோஷினி வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

இதனால் மூர்த்தி ஆரம்பத்தில் கோவப்பட்டாலும் பின்னர் சமாதானம் அடைகிறார். புது மருமகளாக வந்த ஐஸ்வர்யா அனைவரிடமும் மிகவும் கலகலப்பாகவும், வீட்டு வேலைகளை ஆர்வமாக செய்தும் வருகிறார். மேலும், தனது சுதந்திரத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார். இதனால் மீனாவிற்கு ஐஸ்வர்யா மீது சற்று பொறாமை கூட வருகிறது. ஏற்கனவே தங்கள் ரூமை கண்ணனுக்கு கொடுக்க சொல்லி விடுவார்கள் என்று மீனா பயத்தில் இருந்தும் வருகிறார். இந்நிலையில், வரும் வாரத்திற்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் கோபி, அதிர்ச்சியில் ‘பாக்கியலட்சுமி’ குடும்பத்தினர் – அடுத்து வரப்போகும் எபிசோட்!

அதில் கண்ணனும், மீனாவும் நெருக்கமாக இருப்பதை மூர்த்தி தெரியாமல் பார்த்து விடுகிறார். இதனால் கண்ணன், ஐஸ்வர்யா மற்றும் மூர்த்தி மூவரும் சங்கடத்தில் உள்ளனர். இதனால் மூர்த்தி தனத்திடம் வந்து கண்ணனும் ஐஷுவும் அங்க தூங்குறது சரியாபடல என்று கூறுகிறார். உடனே தனம் அவர்கள் தங்கள் ரூமில் படுக்க வைக்கலாம் என்று முடிவு செய்கிறார். இதனால் கண்ணையும் ஐஷுவையும் தங்கள் ரூமில் படுக்க சொல்ல, அவர்கள் தயங்கிய படியே செல்கின்றனர். இதனால் அடுத்து வரும் எபிசோடுகள் இதை ஒட்டியே இருக்கும் என்பது தெளிவாகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!