மூர்த்தியை மேலும் கஷ்டப்படுத்தும் குடும்பத்தினர்கள் – கதிகலங்கும் கதிர்! ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ ரிலீஸ்!
மூர்த்திக்கு தற்போது தான் நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்து கண் முழித்துள்ளார். இந்நிலையில், மூர்த்தியிடம் அடிக்கடி கதிரை பற்றி பேசி மூர்த்தியை கடுப்பாக்கி கொண்டிருக்கின்றனர். இதனால் மூர்த்தியின் நிலை குறித்து கதிர் பயப்படும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூர்த்தி குணமாகி வீட்டிற்கு செல்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். அதாவது கதிரும் முல்லையும் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றதுமே மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்து விடுகிறது. மூர்த்திக்கு இதயத்துக்கு அருகே இரண்டு ப்ளாக் இருக்கிறது எனவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே மூர்த்தியை குணப்படுத்த முடியும் எனவும் கூறுகின்றனர்.
இது மட்டுமல்லாமல் மூர்த்திக்கு எவ்வளவு சீக்கிரமாக அறுவை சிகிச்சை செய்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரமாக மூர்த்தியை குணப்படுத்தலாம். இதனால் உடனடியாக மூர்த்தியின் வைத்திய செலவுக்கு தேவையான 2 லட்ச ரூபாயை கட்டுங்கள் என கூறுகிறார்கள். அவ்வளவு பெரிய தொகைக்கு எங்கு செல்வது என குடும்பத்தினர்கள் அல்லாடி கொண்டிருக்கும் வேளையில் ஜனார்த்தனன் தான் 2 லட்ச ரூபாயை கொடுக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இரண்டாக பிரிந்ததிற்கு ஜனார்த்தனன் தான் முக்கியமான காரணமாக இருந்தாலும் மூர்த்தியின் உயிரை காப்பாற்றியாக வேண்டும் என்பதற்காக அந்த பணத்தை வாங்கி கொள்கின்றனர்.
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபல நடிகர் – ப்ரோமோ ரிலீஸ்!
பின்பு, மூர்த்திக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து மூர்த்தி கண்முழித்துள்ளார். மூர்த்தி கண் முழித்ததுமே கதிர் மூர்த்தியை பார்க்க வந்த விஷயத்தை தனம் மூர்த்தியிடம் கூறுகிறார். உடனே, மூர்த்தி சந்தோசப்படுகிறார். பின்பு, மீண்டும் கதிரின் விஷயத்தை மூர்த்தியிடம் கூறி ஏதேனும் பிரச்னையாகிவிடும் என தனம் பயந்து அமைதியாகிவிடுகிறார். இதன் பின்னர் குடும்பத்தினர்களே புதிய பிரச்சனையை கிளப்பி மூர்த்தியை கொன்று விடுவார்கள் போலயே என கதிர் பயப்படும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.