விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபல நடிகர் – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் கதையில் பல மாற்றங்களுடன் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில், மேலும் சுவாரசியம் அதிகரிக்க புதிய கதாபாத்திரம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் பிரபல நகைச்சுவை நடிகர் ஆதவன் களமிறங்கி இருக்கிறார். அது குறித்து ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
ராஜா ராணி 2 ப்ரோமோ:
ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா ஊர் மக்களை வெடிகுண்டு விபத்தில் இருந்து காப்பாற்றி இருப்பதால் அவருக்கு பல பாராட்டுக்கள் கிடைக்கிறது. ஊர் முழுவதும் போலீஸ் போல போஸ்டர் ஒட்டி வாழ்த்து சொல்ல அது எல்லாம் சிவகாமிக்கு பிடிக்காமல் இருக்கிறார். காவல்துறை சார்பில் சந்தியாவிற்கு பாராட்டுவிழா வைக்க ஆனால் அதையும் தடுத்துவிடுகிறார் சிவகாமி. இன்னொரு பக்கம் சரவணன் சந்தியாவை கோச்சிங் கிளாசில் சேர்த்து விட்டு நன்றாக படிக்க வைக்கிறார்.
Exams Daily Mobile App Download
சந்தியா கண்டிப்பாக போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என சரவணன் உறுதியாக இருக்கிறார். இந்நிலையில் கதையில் சில புதிய கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். ஒன்று ஆதியின் காதலி ஜெஸ்ஸியாக காட்டப்பட்டுள்ளது. அவரை வைத்து கதையில் எந்த மாதிரி மாற்றங்கள் இருக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம். மறுபக்கம் போலி சாமியார் கதாபாத்திரம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சந்தியாவின் கோச்சிங் கிளாஸ் அருகே அந்த சாமியார் சாமி சிலையை எடுக்கிறார்.
ஹேமாவுக்காக விவாகரத்து வேண்டாம் என முடிவெடுத்துள்ள பாரதி – சீரியலில் புதிய திருப்பம்!
அதன் மூலம் மக்களை ஏமாற்றி வருகிறார். அவரிடம் அர்ச்சனாவும் மருந்து வாங்கி சாப்பிடுவது போல கதை காட்டப்படுகிறது. போலி சாமியாராக பிரபல சின்னத்திரை ஆங்கர் ஆதவன் களமிறங்கி இருக்கிறார். ஆதவன் வந்தால் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என்பதால் கதையில் என்ன மாதிரி மாற்றங்கள் வரும், போலி சாமியாரை சிவகாமி பார்க்க வர அதனால் அர்ச்சனா, சந்தியா, ஆதி ஆகியோர் மாட்டிக் கொள்வாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.