ஹேமாவுக்காக விவாகரத்து வேண்டாம் என முடிவெடுத்துள்ள பாரதி – சீரியலில் புதிய திருப்பம்!
பாரதி மற்றும் கண்ணம்மாவின் விவாகரத்து வழக்கு மறுபடியும் நீதிமன்றத்திற்கு வருகிறது. கண்ணம்மாவை விவாகரத்து செய்யவே கூடாது என ஹேமா கெஞ்சியதால் ஹேமாவுக்காக விவாகரத்து செய்ய மாட்டேன் என பாரதி முடிவெடுக்கும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதி கண்ணம்மாவை விவாகரத்து செய்துவிடுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே கண்ணம்மாவை விட்டு விலக நினைத்து கண்ணம்மாவை விவாகரத்து செய்ய அப்ளை செய்திருந்தார். இவர்களின் விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி இருவரும் 6 மாதத்திற்கு சேர்ந்து வாழ வேண்டும் எனவும், அதற்கு பிறகு விவாகரத்து வழக்கிற்கு தகுந்த உத்தரவு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
Exams Daily Mobile App Download
நீதிபதியின் உத்தரவின் பேரில் சில நாட்களுக்கு மட்டும் பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் மறுபடியும் இருவரும் சண்டை போட்டு பிரிந்து வாழ தொடங்கினர். 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. இந்த முறை கண்டிப்பாக விவாகரத்து வாங்கியே தீர வேண்டும் என பாரதி நினைக்கிறார். தன்னுடைய அம்மா உயிருடன் இருக்கும்போது எதற்காக விவாகரத்து செய்ய வேண்டும் என சொல்லி ஹேமா அடம் பிடிக்கிறார்.
விஜய் டிவி ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலுக்கு வந்த சோதனை – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
மேலும், கண்ணம்மாவிடமும் ஹேமா கெஞ்சுகிறார். உடனே பாரதி ஹேமாவுக்காக விவாகரத்து செய்ய மாட்டேன் என உறுதியுடன் கூறுகிறார். பாரதி கூறியதை கேட்டதும் கண்ணம்மா, சவுந்தர்யா என குடும்பத்தினர்கள் அனைவருமே மகிழ்ச்சியடைகின்றனர். இதனை தொடர்ந்து பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேருவார்களா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். DNA டெஸ்ட் எடுக்கும் வரைக்கும் பாரதி கண்ணம்மாவை ஏற்றுக்கொள்ள மாட்டார். இருப்பினும், ஹேமாவுக்காக ஏற்றுக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.