கண்ணனுக்கு பிடித்த உணவுகளை சமைத்து கொடுக்கும் தனம் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர் சீரியல். இந்த சீரியலில் தற்போது அடுத்த நடக்கவிருக்கும் எபிசோட் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
விஜய் டிவியில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை கதையினை மிகவும் அழகாக எடுத்துக் கூறும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தற்போது பலவிதமான சோக காட்சிகள் ஒளிபரப்பாகி வந்தது. முக்கியமாக இப்போது கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டின் எதிரில் குடியிருக்கின்றனர். இதனை முதலில் மீனா சொல்லி தான் தனம் மற்றும் மூர்த்தி இருவருமே அறிந்து கொள்கின்றனர். தேவையில்லாத பிரச்சனையை ஏற்படுத்த தான் இவ்வாறு செய்கின்றனர் என்றும் குடும்பத்தினர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஹேமாவிடம் உண்மையை கூறும் கண்ணம்மா, வெண்பாவை சுடும் சௌந்தர்யா – ‘பாரதி கண்ணம்மா’ அடுத்த ட்விஸ்ட்!
இதற்கு காரணம் மல்லிகா மற்றும் கஸ்தூரி என்று யாருக்குமே தெரியாது. இது ஒரு புறமிருக்க நாளை நடக்கவிருக்கும் எபிசோட் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் கண்ணன் தான் காலேஜ் செல்ல இருப்பதாக ஐஸ்வர்யாவிடம் கூறிவிட்டு செல்கிறார். இதனை வீட்டில் இருந்து கேட்கும் தனம் அவருக்கு பிடித்த உணவு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.
விவாகரத்திற்கு பிறகு பிரபல நடிகருடன் ஒரே நிகழ்ச்சியில் சமந்தா – இது தான் விஷயமா?
பின்னர் வீட்டினர் யாருக்கும் தெரியாமல் கண்ணனுக்கு பிடித்த உணவு வகைகளை செய்து அதனை கொடுத்து விடுகிறார். வீட்டினர் என்னதான் அவர் மீது கோபமாக இருந்தாலும் அவருக்கு பிடித்ததை செய்து கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றனர். இனி வரும் எபிசோடுகளில் ஐஸ்வர்யா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு எதிராக தான் செயல்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.