தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பெற்றோர்களின் ஒப்புதல் கடிதம்!
நவம்பர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பெற்றோர்களின் ஒப்புதலுக்கான படிவம் வெளியிடப்பட்டுள்ளது.
பெற்றோர்களின் ஒப்புதல்:
தமிழகத்தில் 20201-2022ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஜூன் மாத நடுப்பகுதியில் தொடங்குவதாக அரசு அறிவித்தது. கொரோனா தொற்று அபாயத்தினால் மாணவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து பாதிப்புகள் குறைந்து விட்டதால் செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், நவம்பர் 1ம் தேதி தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஹேமாவிடம் உண்மையை கூறும் கண்ணம்மா, வெண்பாவை சுடும் சௌந்தர்யா – ‘பாரதி கண்ணம்மா’ அடுத்த ட்விஸ்ட்!
மேலும் பள்ளிகள் திறப்பது குறித்த முன்னேற்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விழிப்புணர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தாலும் முழு சம்மதம் உடைய பெற்றோர்கள் மட்டும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 312 காலிப்பணியிடங்கள் 2021 – முழு விவரங்களுடன்..!
தற்போது குழந்தைகளின் குடும்பத்தில் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனரா? எத்தனை டோஸ் போடப்பட்டிருக்கிறது, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோரின் ஒப்புதல் போன்ற விவரங்களை பதிவு செய்வதற்கான படிவம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பெற்றோர்கள் தங்களது முழு விருப்பத்துடன் பள்ளிக்கு அனுப்ப ஒப்புதல் அளிப்பதாகவும், நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி முழுவதும் அறிந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.