ஹேமாவிடம் உண்மையை கூறும் கண்ணம்மா, வெண்பாவை சுடும் சௌந்தர்யா – ‘பாரதி கண்ணம்மா’ அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்ததாக கண்ணம்மா தான் தான் ஹேமாவின் அம்மா என்பதை கூற போகிறாராம். இதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர் .
பாரதிகண்ணம்மா சீரியல்
விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது பாரதிக ண்ணம்மா சீரியல். இந்த சீரியல் தெலுங்கு சீரியல் ஆன கார்த்திகை தீபம் தமிழ் ரீமேக் ஆகும். தற்போது இந்த சீரியலில் கண்ணம்மா தனது இரண்டாவது குழந்தையை பற்றி எல்லோரிடமும் கேட்கிறார். ஆனால் யாருமே பதில் பேசாமல் அமைதி காத்து வருகின்றனர். இதனால் கண்ணம்மா வேறு வழியில்லாமல் வெண்பாவிடம் சென்று கேட்கிறார். இது தான் சாக்கு என்று கண்ணம்மாவை மிரட்டுகிறார்.
விவாகரத்திற்கு பிறகு பிரபல நடிகருடன் ஒரே நிகழ்ச்சியில் சமந்தா – இது தான் விஷயமா?
பாரதியை விவாகரத்து செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். இதனை அறிந்து கொண்ட சௌந்தர்யா கண்ணம்மாவை திட்டிவிட்டு ஹேமா தான் கண்ணம்மாவின் இரண்டாவது குழந்தை என்பதனையும் கூறிவிடுகிறார். இதனால் சீரியல் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் காரணம் என்று தெரிந்த பின்பு அவரை சும்மா விடக்கூடாது என்று துப்பாக்கி வைத்து சுட்டு விடுகிறார். இது கண்ணம்மாவின் கனவில் வரும் கனவு என்று கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருந்தாலும் கண்ணம்மா சௌந்தர்யாவின் வீட்டிற்கு செல்கிறார். அங்குசென்று ஹேமாவிடம் தான் தான் உனது அம்மா என்று கூறுகிறார். இதனால் இனிவரும் எபிசோடுகளில் கண்ணம்மா மற்றும் ஹேமாவிற்குமான காட்சிகள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்ணம்மா தான் தனது அம்மா என்று தெரிந்த பிறகு ஹேமா என்ன செய்வார் என்று எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
‘பாரதி கண்ணம்மா’ லட்சுமியின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரல் – ரசிகர்கள் வாழ்த்து!
இனி பாரதியுடன் இருக்க மாட்டேன் என்று கூறுவாரா அல்லது பாரதிக்கும் கண்ணம்மாவிற்கும் என்ன தொடர்பு என்பது பற்றி கேட்பார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.