விவாகரத்திற்கு பிறகு பிரபல நடிகருடன் ஒரே நிகழ்ச்சியில் சமந்தா – இது தான் விஷயமா?
நடிகை சமந்தா தனது விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு முதன்முறையாக தெலுங்கு டிவியின் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சி பற்றிய ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.
பிரபல நிகழ்ச்சி:
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா கடந்த அக்டோபர் 2ம் தேதி அன்று தனது காதல் கணவரான நாக சைதன்யாவை விவகாரத்து செய்வதாக அறிவித்தார். இரு வீட்டார் சம்மதத்துடன் நடந்த திருமணம் முறிவதற்கான காரணங்களாக என்ன இருக்கும் என்று சமூக ஊடகங்கள் அனைத்தும் பல கருத்துக்களையும் கூறி வருகின்றது. திருமணத்திற்கு பிறகும் சமந்தா மிகவும் பிசியாக பல மொழிகளிலும் நடித்து வருவது தான் காரணம் என்று ஒரு தரப்பு கூறி வருகின்றது.
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!
ஆனால் உண்மையான காரணத்தை பற்றி இருவரும் மௌனமாக இருந்தனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னதாக சமந்தா தனது டிவீட்டரில், இந்த இக்கட்டான சூழலில் தன் மீது காட்டும் அன்பிற்கு நன்றி என்றும், அந்த விதமான வதந்திகளும் தன்னை பாதிக்காது என்றும் தெரிவித்திருந்தார். தற்போது, தெலுங்கில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகிறார். மிகவும் பிரபலமான அந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களும் அவ்வப்போது கலந்து கொள்வார்கள்.
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
இந்த நிகழ்ச்சியில் நடிகை சமந்தா போட்டியாளராக கலந்து கொள்வதாக நிகழ்ச்சி தரப்பில் இருந்து வீடியோ ஒன்று ப்ரோமோவாக வெளியாகியுள்ளது. விவகாரத்திற்கு அறிவிப்பிற்கு பிறகு சமந்தா கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. சமந்தா கலந்து கொண்ட எபிசோட் தசரா பண்டிகை ஸ்பெஷலாக அக்டோபர் 15ம் தேதி ஜெமினி டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த போட்டியில் சமந்தா ரூ.25 லட்சத்தை பரிசாக வென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.