நடிகை சமந்தாவிற்கு அறிவுரை கூறிய வனிதா விஜயகுமார் – வைரலாகும் பதிவு!
காதல் கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்துள்ள நடிகை சமந்தாவிற்கு நடிகை வனிதா விஜயகுமார் தனது ஆறுதலையும், அறிவுரைகளையும் வழங்கியிருக்கிறார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை வனிதா விஜயகுமார்
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் தங்களது விவாகரத்து செய்தியினை உறுதி செய்தனர். இந்த செய்தி ரசிகர்களை மட்டுமின்றி திரையுலகினர் அனைவரையும் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பலரும் தங்களது அனுதாபங்களையும், அறிவுரைகளையும் நடிகை சமந்தாவிற்கு கொடுத்து வந்தனர். ஆனால் சிலரோ நடிகை சமந்தா கருவினை கலைத்து விட்டதால் தான் விவாகரத்து செய்துள்ளார் என்றும் அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பது நாக சைதன்யா குடும்பத்திற்கு பிடிக்கவில்லை என்றும் கூறி வந்தனர்.
கண்ணனுக்கு பிடித்த உணவுகளை சமைத்து கொடுக்கும் தனம் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோட்!
இது போன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பதிவினை பதிவிட்டிருந்தார். அதில் அவர் விவாகரத்து என்பது மிகவும் வலி மிகுந்த செயல்முறையாகும். எனக்கு இதிலிருந்து மீள நேரத்தை எடுத்துக் கொண்டேன் என்றும் பதிவிட்டு இருந்தார். தனக்கு ஆறுதல் அளித்த அனைவருக்கும் வதந்திகளில் இருந்து தன்னை பாதுகாத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் ஒரு பதிவினை பதிவிட்டிருந்தார்.
ஹேமாவிடம் உண்மையை கூறும் கண்ணம்மா, வெண்பாவை சுடும் சௌந்தர்யா – ‘பாரதி கண்ணம்மா’ அடுத்த ட்விஸ்ட்!
இப்படியான நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் நடிகை சமந்தாவிற்கு ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது ‘இங்கு சமூகம் என்று எதுவுமே இல்லை உனது வாழ்க்கையை நன்றாக வாழ கற்றுக்கொள், மக்கள் நாம் பதிவு செய்யும் புகைப்படங்களை மட்டும் தான் பார்ப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை’ என்று அறிவுரை செய்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.