‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் முல்லையின் சொந்த குரல் – ரசிகர்கள் பாராட்டு மழை!
ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தற்போது முல்லையாக நடித்து வருகிறார் நடிகை காவியா அறிவுமணி. அவர் தனது சொந்த குரலில் பேசி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
இன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் அதிகமாக விரும்பி பார்ப்பது சீரியல்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தான். அந்த வகையில் மக்களுக்கு பிடித்த வகையில் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி. அதிலும் குறிப்பாக அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த ஒரு சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். இந்த சீரியலின் வெற்றிக்குப் பின்னால் இருப்பது கதைக்களம் தான் என்று கூறினாலும் இதில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பங்கு அலாதியானது.
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் – சரியும் TRP! காரணம் இதுதான்!
அந்த வகையில் இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருபவர் தான் நடிகை காவியா அறிவுமணி. முல்லை கதாபாத்திரம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்ததற்கு காரணம் நடிகை சித்ரா. ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் தற்கொலை செய்து கொண்டதால் இந்த கதாபாத்திரத்தில் நடிகை காவியா அறிவுமணி நடிக்க ஆரம்பித்தார். முதலில் இவரை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அவரது நடிப்புத்திறன் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
செழியன் & ஜெனியை சேர்த்து வைக்கும் பாக்கியா – பலவித திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’ சீரியல்!
தற்போது முல்லை கதாபாத்திரத்தில் மிகவும் ஒன்றி விட்டார் என்று தான் கூற வேண்டும். இது ஒரு புறமிருக்க தற்போது அறிவுமணி தனது சொந்த குரலில் ஒரு விளம்பரத்திற்காக பேசி ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். சீரியலில் அவரது குரலை கேட்க முடியாத ரசிகர்கள் தற்போது அவரது சொந்த குரலைக் கேட்டு ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். அவரது குரல் மிகவும் நன்றாக இருக்கிறது எனவும் பாராட்டி வருகின்றனர்.